Man vs Wild-டிஸ்கவரி

  • 0
டிஸ்கவரி சனலை பார்ப்பவர்கள் உண்டா?
இருந்தால் உடனே கையை தூக்கவும்! இனி என்ன செய்ய தூக்கிய கையை கீழே வைத்து விட்டு மிகுதியை வாசியுங்கள்

என்ன ஒரு அழகான தமிழ் சனல் சும்மா சன் டிவி ,கே டிவி,விஜய் டிவி என்று எத்தனையோ தமிழ் சானல்களுக்கு மத்தியிலும் தமிழை தமிழாக காட்டிநிக்கின்றது இந்த அந்நிய டிவி தமிழ் சானல்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 5 மணித்தியாலம் எதோ ஆங்கிலத்தில் அலட்டுவார்கள் மிச்சம் இருகின்ற நேரங்களில் எதோ பாட்டு பாடுவார்களாம் (சூப்பர் சிங்கர்) சாப்பிட்டு திமிர் முறிக்கின்ற வேலை அது

டிஸ்கவரி சனல் பார்ப்பவரா நீங்கள்? (தமிழில்கூடப் போட்டபிறகும் அதைப்பார்க்காமல் ‘தங்கம்’ பார்ப்போர் மேலே தொடரவேண்டாம்.) அதில் ஒளிபரப்பாகும் Man vs Wild பார்ப்பதுண்டா? 


பியர் கிரில்ஸ் என்னும் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் நாம் மனித உதவிகளற்ற வனாந்தரங்களில் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்து உயிர்தப்பலாம் என்று உலகத்தின் ஒவ்வொரு மரணப்பொறிகளிலும் விழுந்து விழுந்து எழுந்துகாட்டுகிறார். நாளைக்கே வாழ்க்கை நம்மையும் ஒரு மரணப்பொறியில் மாட்டிவிடலாம் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அதைப்பார்த்து வாழ்க்கையின் சவாலை ஏற்கத் தயாராகலாம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். அல்லது கயிறு, கிறபிக்ஸ், மற்றும் டூப்களின் உதவியொடு செய்து காட்டினாலும் ஒரு தனி மனிதனாக இன்று அதை செய்வது போற்றத்தக்கது


அவர் உயிரோடு தவளை பாம்பு என கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ கற்று தரும் நிகழ்ச்சி மிக புகழ் பெற்றது
மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன்

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு விதி முடிஞ்சி போச்சின்னு அர்த்தம்டா!!

இப்படி பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்க்கிறதை விட்டுட்டு எது டான்சு,பாட்டு நிகழ்ச்சிகளை பாத்து கொண்டே இருங்கடா நாடும் வீடும் விளங்கிடும்
இந்த பதிவை நான் இடக்காரணம் நான் பார்த்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு அசரீதி திரும்பிப்பார்த்தால் வேற யார் ?

இதுகளை பார்க்கிறதை விட்டுட்டு போய் படிக்கிற வேலையை பார்
பிறகு என்ன நடையை கட்டியதுதான் அதன் பிறகு மாமியார் மருமகள் அடிபாடுதான் (நாடகத்தை சொன்னேன்)

No comments:

Post a Comment