கந்தன் கருணை கணனியில்............

  • 0

                 இன்று நான் எனது முகப்புத்தகத்தை திறந்த போது அதிலே எனது நண்பர்கள் Group  ஒன்றில் என்னையும் ஒரு அங்கத்தவர்களாக இனைத்து இருந்தனர் அதிலே காணப்பட்ட இந்த பாடலை நீங்களும் கொஞ்சம் கேளுங்களேன் இதனை இங்கு இடுகையாக இட்டுள்ளேன் இதனை கேட்காமல் தான் காந்தியினுடைய குரங்குகள் காதுகளை பொத்திக்கொண்டுள்ளன போல எனக்கு தோன்றுகின்றன

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
    
    இந்தப்பாட்டு பிடித்திருந்தால் கட்டாயம் இந்தப்பாட்டை எழுதினவனை ஒரு முறையாவது நினைத்துப்பாருங்கள்.என்னை நினைக்க வேண்டாம் சத்தியமாக நான் இந்தப்பாட்டை எழுதவில்லை.

இங்கிலாந்தில் இந்தியா!.......

  • 0


இந்தியா வரலாற்றில் அதிலும் குறிப்பாக டோனியினுடைய காலத்தில் கண்ட மிகப்பெரிய தோல்வி இதுதான் இத்துடன் நான் ஒரு இந்தியா ரசிகன் என்பதால் இந்த தோல்வியையும் அதனுடைய விளைவுகளையும் சிறு அலசல் போடலாம் என்று நான் நினைக்கிறேன்.இந்தத்தொடர் முடிந்த பிறகு வெட்டியாய் வீட்டில் இருந்த போது ஒரு சில பத்திரிகைகளை வாசித்ததுண்டு அதிலே குறிப்பாக மும்மூர்த்திகளின் ஓய்வுகளுக்குப்பிறகு என்ன இந்தியா செய்யப்போகிறது?........  என்ற தலையங்கங்களை காணக்கூடியதாக இருந்தது.இந்த இடுகையின் நோக்கம் இந்தியா அணியின் தோல்வியின் பின்னர் இந்தியா அணியில் ஏற்ப்பட போகும் மாற்றங்களும் அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பபோகிறாற்கள் என்ற ஒரு பார்வையாக உள்ளது 
இந்தியா அணியை பொறுத்தவரையில் சற்றும் மனம் தளராத அணியாக காணப்படுகிறது லச்மன் டிராவிட் சச்சின் ஆகியோரது ஓய்வுகள் இந்தியா அணிக்கு பாரிய பின்னடையை எதிர் நோக்கும் என்பது எல்லோரது கருத்தும் அவ்வாறு இருந்த போதும் அதனை நிவர்த்தி செய்வதற்காகவே இளம் வீரர்கள் இந்தியா அணியில் கண்டறியப்பட்டுள்ளார்கள் கொஹ்லி,சர்மா போன்றோரது வருகையின் பின்பு எழுச்சி பெற்று விடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
இந்தியா அணியை பொறுத்தவரையில் முன்னைய அணித்தலைவர்களின் கருத்துக்கள்

கும்ப்ளே:
                 இந்தியா அணியில் புதிய இளம் வீரர்கள் இனம் காணப்படவேண்டும் என்றும் அவர்கள் மிகக்குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்பதும் அத்துடன் பங்குபற்றினால் தான் மூத்த வீரர்களது இழப்புக்களை ஈடு சிய முடியும் எனவும் கூறினார் அத்துடன் அவர்களது கருத்துப்படி இந்தியா அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார் 

கங்குலி;

             தாங்களும் இந்த மைதானங்களில் தான் ஆடினோம் அதனால் இந்த தோல்வி பற்றி எந்த காரணமும் கூற முடியாதென இந்தியா பயிற்றுனருக்கு கூறியிருந்தார் இந்த ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்களும் இந்த ஆடுகளங்களில் வெற்றிகளை சுவைத்தோம் என்றும் அத்துடன் எல்லோரது கருத்துப்படி இளம் வீரர்கள் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் கூறினார்

               இவ்வாறு கூறியதை தொடர்ந்து இந்தியா அணித்தலைவர் தாங்கள் ஒருபோதும் தோல்வியால் துவளவில்லை மீண்டும் சாதிப்போம் என்று கூறியது எனக்கும் அத்துடன் இந்தியா ரசிகர்களுக்கும் பாரிய வரப்பிரசாதமாக காணப்படுகிறது அத்துடன் இந்த தொடர் இந்தியா அணிக்கு பாரிய சவாலாக அமைந்தது அத்துடன் சச்சின் போன்றோர்கள் நன்கு கற்று கொண்டுள்ளனர் என கூறுவது எந்த வகையிலும் எடுபடாத கூற்றாக காணப்படுகிறது இந்தியா அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களது மோசமான நிலைகளாலே இந்த பாரிய தோல்வி ஏற்ப்பட்டது அத்துடன் இது பற்றி பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது ஏன் எனில் துடுப்பாட்ட வீரர்களால் 350 ஓட்டங்களுக்கு மேல் எந்த ஒரு இன்னிங்ஸ்யிலும் பெற முடியாமல் போனது ஒரு காரணமாகும் அத்துடன் டிராவிட் இந்த தொடரில் மொத்தம் 450 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தொடர் ஆட்ட நாயகன் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி அழிக்கிறது அத்துடன் இந்த தொடர் தோல்விக்கு வீரர்களது காயங்களும் அவர்களது விலகலுமே காரணமாகியது 
      அத்துடன் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு மோசமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார் அத்துடன் அவர் முரளிக்கு நிகராக ஒப்பிட்டு வந்தவர்களுள் ஒருவர் ஆவார் அத்துடன் இந்த தொடரில் அவரால் ஒரேஒரு விக்கெட் மட்டுமே கைப்பெற்ற முடிந்தது அத்துடன் மாஸ்டர் துடுப்பாட்ட வீரரான சச்சின் ஆல் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது வருத்தம் அழிக்கிறது 
   இவ்வாறு ஒட்டு மொத்த அணியின் குழம்பல்களாலே இந்தியா அணி தனது முதல் இடத்தில் இருந்து சறுக்கியுள்ளது இது தொடர்ந்து தொடருமா?......................இந்ததோல்வியுடன்முடிவுபெற்றுவிடுமா?...............பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

ஒரு நாள் நியத்தில் நடந்த உண்மை.............

  • 1

               
                                     சுமார் 08.௦௦30 மணியளவில் தனியே ஒரு பயணம் கந்தரோடையிலிருந்து வீடு நோக்கி கண்ட காட்சிகள் ஏராளம் கேட்ட வாக்கியங்களும் ஏராளம்
தனியே எனது வகுப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வரும் வழியில் ஒரு மது தவறணை அதையும் தாண்டி வந்தால் ஒரு சுடலை இவ்வாறு தனியே அச்சத்தின் மத்தியில் ஒரு பயணம் வீடு வந்து சேர்ந்திட வேண்டும் என்ற அவா பயணம் செல்கையில் மூவரை சந்திப்பு இருட்டிய நேரம் முனுமுனுகல் எனது காதில் கேட்டது,விரைவு எனது சைக்கிள் மீண்டும் கேட்பு ஓடியது எனது சைக்கிள்.கிரிஸ் மனிதன் என்ற அச்சம் 
    என்ன இதனை எல்லாம் வைத்துபார்க்கும் பொழுது என்ன ஒரு பேக்கதை சொல்ல போறேன் என்று எண்ணுகிறீர்களா இல்லை கிட்ட வந்து பார்த்தால் மூன்று வெறிகாரர்கள் நடு வீதியில் நல்லுறக்கம் அங்கே பத்து நபர்கள் வேடிக்கை இவ்வாறு ஒரு காட்சி அவர்களை சிலநபர்கள் எழுப்பி விட்டனர் அதில் மூவரினது வாயில் இருந்தும் மந்திரங்கள் பொழிந்தன (கேட்க என்ன ஒரு ஆனந்தம் ) அவர்கள் நான் வரும் பாதையில் தான் வந்தனர் முந்தவும் முடிய வில்லை முந்தினாலும் இன்பம் தரும் மந்திரங்கள் இவ்வாறு ஒரு பயணம் 
         அவர்களை தொடர்ந்து சில நபர்கள் வேடிக்கை பார்க்க நானும் அதில் ஒருவன் (வீட்டை நோக்கி) அதி ஒருவர் சிவாஜி பாட்டு வேற நடக்கவே முடியவில்லையாம் அதில் பாட்டுகள் (ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி வைத்திருக்கவே வழியில்லையாம் அதில ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம் )என்ற நினைப்பு எனக்கு (அவர்களை பற்றி) 
அதிலே ஒரு சிந்தனை! யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் எங்கே போகுது?  அதிலும் ஒரு சந்தோசம் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் பனையில் அத்துடன் பனம்கோலாவிலும் என்று சிந்தனைகள் பலவிதம் அதிலே அது ஒருவிதம்.
வீதிகளின் இருபுறமும் சைக்கிள் ஓட்டம் நானும் அவ்வாறே இவ்வாறு ஒரு மாதிரியாக வீடு வந்து சேர்ந்தேன் அதனை ஒரு இடுகையாக இட வேண்டும் என்ற ஒரு ஆசையால் இதனை இங்கு தந்துள்ளேன் அத்துடன் அந்த நாளை நினைவு கூறுவதற்காகவும் இந்த இடுகையை தந்துள்ளேன் இவ்வாறு தந்தமை சிரிப்புக்காக இல்லை யாழ்ப்பாணத்தினுடைய கலாச்சாரத்தினுடைய போக்கை பற்றித்தான் இதனால் இரவு எட்டு மணிக்கு பிறகு குடிப்பதால் என்ன பயன் அதனால் அதற்க்கு முதல் குடியுங்கள் (அப்ப தானே இன்னும் நூறு பேர் பார்ப்பினம் நீங்கள் உலகம் முழுவதும் பிரபல்யம் ஆவீர்கள்) என்னும் நூறு பேர் உங்களை பார்த்து குடிப்பார்கள்

எனது வலை பூ உருவான கதை

  • 0

I LOVE BLOGGING , இந்த வலை பூவுக்குள் நான் விழுந்த கதையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
2011 /05 /01 இல் எனது கனவை உங்கள் கண் முன் கொண்டுவந்த நாள் இதுவே இதன் மூலமாக எனது கருத்துக்களை சுதந்திரமாக வலை உலகில் பறக்கும் படி செய்த நாளும் இதுவே இதனால் என்னை ஒரு பதிவாளராக உருவாக்கியது இந்த நாளே இவ்வாறு பலவிதமாக எனது செயற்ப்பாடுகளை ஒருங்கமைத்த நாளும் இதுவே ............
இந்தநாளை எனது வாழ்வில் மறக்க முடியாத நாளாக நான் கருதுகிறேன்
நான் சாதாரண தரம் எடுத்து பரீட்சை முடிவுக்காக காத்திருந்த வேளையில் எனது கண்ணில் பட்டதுதான் இந்த அருமையான வலை உலகம் இந்த வலையில் எனது தடத்தினை பதித்த முதல் நாள் எனக்கு என்ன இதில் தருவது என்று ஒன்றும் தெரியவில்லை அப்பொழுது I.P.L போட்டி நடை பெற்றுவந்தது அதிலே எனது ஆதரவு அணியாக காணப்பட்ட சென்னை அணியில் எனது முதல் இடுகையை இட்டேன் அத்துடன் எனது பாடசாலை நாட்களில் எனது நண்பர்கள் இதற்கு ஆதரவு அளித்தபடியாலும் என்னை இன்று ஒரு இலக்குடன் செயற்ப்பட வைத்த எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்
அத்துடன் முன்பு என்னக்கு வலை உலகில் ஆசை இருந்தபடியாலும் என்னால் இதனை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தபடியாலும் என்னை காணும் நண்பர்கள் இதனை (blog) எப்படா ஆரம்பிக்கப்போகிறாய் என்று அடிக்கடி கேட்ட படியாலும் எனது உணர்வுகளை எழுத்துமூலமாக இன்குதர வைத்தது.
அத்துடன் நான் தரம் 10 இல் படிக்கும் பொழுது பார்வை இட்ட சில வலை பூக்களையும் அதிலே அவர்களுடைய நகைச்சுவைகளையும் அத்துடன் குமுறுகின்ற சில பதிவுகளையும் பார்த்து ரசித்த நாள்கள் எத்தனையோ! இவ்வாறு எனது அடி மனதில் எழும்பிய இந்த ஆசை நான் இப்போது உங்கள் முன் இந்தப்பதிவுகளை தருவதற்கு அத்திவாரமாக இருந்தது
நான் பாடசாலை நாட்களில் ஒரு சில கவிதைகளை,கதைகளை வரைந்ததுண்டு அப்பொழுது செய்யாத சில விடையங்களை இப்பொழுது செய்வதை
எண்ணி மகிழுகின்றேன் எனக்கு facebook இல் மீதான அதிக நாட்டமும் தமிழிலே தட்டச்சு செய்வதனாலும் எனது இந்த வலை அமைப்பை எழுதுவதற்கு மிக உதவியாக இருந்தது.
நான் அளவெட்டியில் உல்லாசமாக திரிந்த வேளையில் facebook இல் இருந்ததுதான் அதிகம் இப்போது வலைப்பூவில் உள்ள ஆர்வம் முன்பும் இருந்தது இருந்தும் என்னோடு கூடப்பிறந்த சோம்பலும் அலுப்பும் இதனை தடுத்து நிறுத்தியது மீண்டும் இந்த வலைப்பூ பூக்கும்.
மீனவர் வலையில் மீன்கள் எனது வலையில் நீங்கள்.

barn buddy யும் மிதி வெடியும்

  • 0

இன்று முளைத்த பிஞ்சுகள் முதல் பல்லுப்போன கிழவி வரை முகப்பு புத்தகம் வைத்திருப்பது உலகளவில் அறிந்த உண்மை தான் இருந்த போதும் இதன் மூலம் விவசாப்புரட்சி ஒன்று உருவாகிஉள்ளது என ஆய்வாளர்களின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது.ஏன் எனில் எல்லோரது கணக்கிலும் barn buddy எனும் இணைய பொழுதுப்போக்கு விள்ளையாட்டு உள்ளது.இதனை இவர்கள் பொழுதுபோக்கு அம்சமாக கருதுவதில்லை.ஏன் எனில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் உள்ளது.

                                   
                                அன்று ஒருநாள் எனது முகப்புத்தகத்தில் நான் எனது barn buddy விளையாட்டில் எனது நாய்க்கு உணவு வைக்க மறந்துவிட்டேன் அதனால் அது நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டது இதனால் நண்பன் farm நமது farm எனக்கருதி அதிகாலை எழும்பி என்னுடைய farm இல் நன்றாக ஆட்டையை போட்டுவிட்டார் இதை நான் கவனித்தேன்(எனது பண்ணையில் ஆவாஸ் அஞ்சின்ங் என்றும் போட்டிருந்தேன்)
         அதிகாலையில் படிப்பதற்கு கூட எழும்பாத அந்த நபர் அலாரம் வைத்து எழும்பி எனது பண்ணைக்குள் தனது கை வரிசையை காட்டியுள்ளார்.இதிலிருந்து அவரின் கடமை உணர்ச்சியை மெச்சுகிறேன்.
   அத்துடன் இன்னுமொரு அனுபவம் உள்ளது அது என்னவென்றால்:
               ஒருநாள் வந்த நண்பன் நான் இன்று எனது பண்ணைக்கு போகவில்லை என்றும் அதிலே நான் நிறைய பணம் உழைப்பதாகவும் அதில் வரும் பணத்தில் ஆடு,மாடு வேண்டுவதாகவும் கூறினார் அத்துடன் நான் ஒரு credit card வைத்துள்ளதாகவும் கூறினார் நான் அதிலே ஒரு கணம் திகைத்தேன் பின்புதான் நன்றாக விசாரித்தபோது அவர் சொன்னது எல்லாம் barn buddy எனும் அந்த மிதிவெடி என்று.
       அத்துடன் சில நண்பர்கள்

                               காலை எழுந்தவுடன் barn buddy பின்பு 
                       கனிவு கொடுக்கும் நல்ல city ville 
                             மாலை முழுதும் farm ville -என்று 
                        வழக்கப்படுத்தும் சில நண்பர்கள்
 
என்று சிலர் இந்தக்கட்டமைப்புக்குள் வாழ்ந்தவண்ணம் உள்ளனர் 
                   இதனால் இது பலருடைய வாழ்வில் மிதிவெடி என்று நான் கருதுகிறேன் மிதி வெடியில் கூட கால் வைத்து எடுத்தால்தான் வெடிக்கும் அனால் இதை Allow பண்ணினாலே இருப்பதெல்லாம் பறக்கும் கொஞ்சம் கண் அயர்ந்தால் போதும் எழும்பி விடுவார்கள் தமது தொழிலுக்கு அதிகாலையில் 


குறிப்பு: நான் அன்று அதனை போலீஸ் நிலையத்துக்கு அறிவித்த்ருக்க முயற்ச்சித்தேன் இருந்த போதும் எனது மனம் அதற்க்கு இடம் கொடுக்கவில்லை இதன் மூலம் நான் கூறவருவது என்ன வென்றால் face book என்றவுடன் note book ஐ கூட மறக்கும் சிறுவர்களுக்கு மத்தியில் இது ஒரு அச்சாணிதான்.

வண்டில் மாடும் வானரக் குழந்தைகளும்..........

  • 0

தற்கால நாகரிக உலகில் இந்தக்கொடுமைகளையும் பாருங்களன். எவ்வளவு அறிவு முதிர்ந்த இந்த உலகில் முன்னையகால மாடுகளை காணாத மனிதர்கள் அதிகம் உள்ளனர் போல தோன்றுகிறது ஏன் எனில் தங்களுடைய குழந்தைகளை மாடுகள் போல ஒரு கயிறால் கட்டி தாங்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்கின்றனர்
             அதைவிட என்ன கொடுமை என்றால் அந்த நாகரிகத்தை இன்று எமது உலகிலும் மாடு வளர்ப்பு போல குழந்தை வளர்ப்பை அக்கி விட்டிடுவார்கள் என நான் நம்புகிறேன் அத்துடன் அவர்களுடைய வருகைகள் அதிகரித்து வருவதாலும் அது எமது இளைய சமூகத்தில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என ஒரு பத்திரிகையில் இருந்ததை நான் வாசித்தேன் அதனை ஒரு இடுகையாக இட வேண்டும் என முடிவு செய்து இந்த இடுகையை இட்டுள்ளேன் 

                             நாய் வளர்ப்பிலும் கேவலமாக இன்று எமது குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் சில பெற்றோர்கள் அத்துடன் சில இடங்களுக்கு அவர்களை கூட்டி சென்று அந்த சிறுவர்களை மேய விடுகின்றனர் சில வானரங்கள் 
                                 ஐயோ இந்தக்கொடுமைகள் வேண்டாம் குழந்தைகளுக்கு (மிருக வளர்ப்பு)

உள்ளவரை சிறக்கும் நட்பு+நகைச்சுவை

  • 0

 யாரு உங்க வாக்காளர் இடத்தில் வெடி குண்டு இருப்பதாக புரளி
                        கிளப்பி விட்டது 
                   எங்க கட்சித்தலைவர் தான்
                        ஏன்?
                    வாக்காளர் இடத்தில் தூங்கிறவர்களை எழுப்ப
                                                வேறு வழி தெரியவில்லையாம்.

                             உங்கள் கட்சித்தலைவர் வீட்டுக்கு முன்னால்
                                        சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பலகையுடன் இருந்தீர்கலே
                                  ஏன் சீக்ககிரம் வந்துவிட்டீங்கள்?
                                             அந்த மனுசன் இப்போதைக்கு சாகிற மாதிறி தெரியவில்லை அதனால் தான்.

              என்ன இந்த இடுகையை நகைச்சுவையுடன் ஆரம்பிக்கிறேன் என்று பார்க்கிரீங்களா!
திருமண மாக்கற்றில் விலை போகாமல் தன் கையே தனக்கு உதவியென வாழ்ந்து கொண்டிருந்த எனது நண்பன் ஒருவனுக்கு எழுந்த ஒரு கற்பனை என்று சொல்வதை விட அவனது ஆவல் என்று தான் இதனை கூறமுடியும் அன்று ஒருநாள் டியூஷன் முடித்து பேருந்துக்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது அதுதான் வருங்கால அரசியல்வாதியாக வந்து விடவேண்டும் என ஒரு நோட்டீஸ் ஒன்றை பார்த்தபடி முணுமுணுத்தான்.
                                     ................................. முடியவில்லை முடியவில்லை ...........
என்று நான் முணுமுணுத்தேன்.
                   ஏன்டா? இந்த கற்பனை தப்பா? சரியா? 
                                  இந்தமுறை உதுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை 
நண்பா 
விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.
ஆனா,
கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா? 
                                                
முதலில் யோசிக்க வேண்டிய விடயம் இது. ............விட்டுவிடு அடுத்தது ஏதாவது இருக்கா 
இவ்வாறு பேசிக்கொண்டு கடைக்குள் நுழைந்தோம் அங்கேயும் முணுமுணுத்தான் நண்பா நூறு ரூபா பணம் இருக்கா 
                          நூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....அடடா, எங்கிட்ட பணம் சுத்தமா ல்லியே....
.பரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க.

இவ்வாறு அதையும் முடித்துக்கொண்டு மீண்டும் பேருந்து நிலையத்துக்குள் நாமிருவர் நமக்கு முன் இருவர் 

                                         தெய்வீகக் காதல்னா என்னடா நண்பா?
அது வேறொண்னுமில்லடா. காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சின்னு பேருள்ள பொண்ணுங்களைக் காதலிக்கறது தான்டா தெய்வீகக் காதல்.


 
அந்தக்கால பார்வை நகைச்சுவையாக கிடைத்தால் இப்படி ஒரு நண்பன் கிடைக்காவிட்டால்!நண்பர்களிடம் இவ்வாறான நகைச்சுவைகள் இருந்தால் மட்டுமே அந்த நட்பு சிறக்கும்



கணத்தில் தோன்றிய நல்லூர் கந்தன் என் பார்வையில்

  • 1
                    களவுகளின் தாயகம் என்று வர்ணிக்கப்படும் நல்லூர் ஆலயம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பிதிதுள்ளது அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள கள்ளர்களும் சங்கமிக்கும் ஒரு மத்திய நிலையமாக தற்பாது விளங்குகிறது நல்லூர் கந்தன் ஆலயம். நாட்டினுடைய சீரான போக்குவரத்து வசதிகளும்,வெளிநாட்டவர்களின் உல்லாச வருகையும் கள்ளர்களிடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்தவகையில் இந்தமுறை என்ன என்ன ஆட்டை நடக்கப்பேகுதோ கந்தனுக்குதான் தெரியும்.
                அதை விட கந்தன் கோவிலுக்கு வருகின்ற பெண்களுக்கு ஒரு பிற்போக்குவாதம் நடைபெறுகின்றது போல தோன்றுகின்றது அவர்கள் இனி கோவிலுக்கு வரும் போது ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட மரபு ஆடைகள் ஆனா சேலை ,தாவணி ,நீளப்பாவாடை சட்டை முதலியவற்றை அணிந்து வரவேண்டும் எனவும் இதை மீறி ஜீன்ஸ் ,சுரிதார்,அரைக்கால் சட்டை அணிந்து வருகின்ற தமிழ் பெண்கள் தமது பாரம்பரியத்தை மீறுபவர்களாகவும் கருதப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது இதனை நானும் எனது ஒரு நண்பனும் இணையத்தளம் ஒன்றில் வாசித்து கொண்டிருந்தபேது எனது நண்பன் என்னை ஒரு கேள்வி கேட்டான் ................. ஐயோ அதுவும் ஒரு கேள்வியா?

                                         ஏன்டா இந்த பெண்களுக்கும் மட்டும் தானே இந்தளவு பிரச்சனையும் வருகுது நானும் பிறந்ததில் இருந்து இந்த எலும்பும் தோலையும் காட்டிக்கொண்டு தானே நிக்கிறேன் எங்களுக்கு இந்த பிற்போக்கு புரட்சிகள் ஒன்று நடை பெறாத என்று?  ................. அந்தக்கணத்தில் சிந்தித்தேன் .....திகைத்தேன் 

ஆடை என்பது என்ன? நாகரிகத்தின் அடையாளமே.உடம்பை திறந்து காட்டிக் கொண்டு இந்த பிற்போக்கு சமூகத்தில் நிற்கும் ஆண்களின் உணர்வுகளை எப்பவாவது சிந்தித்ததுண்டா?
                            எடுத்த எடுப்பிலே நல்ல முடிவுகளை உதாசீனம் செய்த படியால் தான் இன்று தமிழனுக்கு இக்கதி எனக்கும் இக்கதி 

இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வழிகாட்டலில் நல்லூர் சிறிய, நடுத்தர கைத்தொழிலாளர் சங்கம், கைத் தொழிலாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் நல்லூர் உற்சவ காலத்தில் வர்த்தகசந்தை ஒன்றை நடத்தவுள்ளது.
                அப்பதானே கள்ளர்களின் கை வரிசையும் அமோகமாக இருக்கும். வந்தவனுக்கு நகையும் பொருட்களும்.





           இனியும் கை வரிசை பட்டியல்கள் சிலநாட்களில் பத்திரிகைகளில் வெளிவரும் அதையும் நன்றாக கவனியுங்கள்.

blood diamond(வைர வேட்டை)+பார்த்ததில் பிடித்தது

  • 0
                                                                         இந்தப்படம் 2006 ம் ஆண்டு வெளிவந்தாலும்(blood diamond) இந்தப்படத்தை கடந்த திங்களன்று என்னால் பார்க்க முடிந்தது. இச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த எனது நண்பன் ஆதவன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் இந்த படத்தில் வருகின்ற நிகழ்வுகள் எல்லாத்தையும் பார்க்கின்ற பொழுதுதான் ஒரு தனி மனிதரின் வாழ்வில் உள்ள துயரங்கள், குடும்ப பாசங்கள் ,ஏழ்மை நிலை எல்லாவற்றையும் அறிய முடிகிறது 

                                      இந்த படத்தில் வருகின்ற கதாநாயகன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அத்துடன் titanic போன்ற வெற்றி படங்களில் நடித்த Leonardo DiCaprio வின் நடிப்பு படத்தை மேலும் வெற்றி பெறச் செய்தது
                                    ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கென்யாவில் தனது வாழ்க்கையை மேற்க்கொண்டு வரும் Solomon Vandy குடும்பத்தில் Solomon Vandy தனது மகன் மீதன நம்பிக்கையை மிகவும் வைத்திருந்தார் அத்துடன் ஒரு நாள் தனது மகனை புரட்சிகாரரிடம் தவற விட்ட Solomon Vandy தனது வாழ்வை வைர சுரங்கத்தில் களித்து கொண்டிருந்தார் அப்போது அவரின் கண்ணில் பட்டதுதான் ஒரு வைரம் அதை வைத்து கதையை மிகவும் எழிமையாக நகர்த்தி கொண்டு செல்கிறார் இயக்குனர்

                                      அப்போது அங்கு வந்த வைரம் கடத்தும் கும்பலுடன் மாட்டிக்கொள்ளும் Solomon Vandy  கதாநாயகன்  Danny Archer (Leonardo DiCaprio) யுடன் இனையும் இடதில் இயக்குனர் கதையை வெகுவாககூறியுள்ளார் அத்துடன் தனது மகன் புரட்சிகாரரிடம் சென்று தானும் அவ்வாறு மாறியதை நினைத்து Solomon Vandy படும் வேதனைகளை பட்டும் படாமலும் கூறிஉள்ளார்.அத்துடன் ஒரு பத்திரிகையாளரின் படம் என்பதையும் கூறலாம்
                            கொலையாளிகள் யார்? எதற்க்காக கடத்தப்படுகிறார்கள்? கொலை செய்யப்படும் ஆட்களின் பின்னனி என்ன என்பது விறுவிறுக்கவைக்கும் இறுதிக்காட்சி.அத்துடன் Danny Archer (Leonardo DiCaprio) ற்க்கும் Maddy Bowen (Jennifer Connelly) இடையில் மலரும் காதல் கதையை எந்த அளவுக்கு அழகியல் ரசனையோடு சொல்ல முடியுமோ அந்தளவுக்கு மென்மையாகச்சொன்னதற்காகவே இயக்குனர் 

Edward Zwick பாரட்டுக்குரியவர் ஆகிறார்.



 

  எத்தனை எத்தனை கதைகளை சொல்லுகின்ற இந்த திரைப்படத்தில் கடைசியில் கதாநாயகன் பற்றி எந்த முடிவும் கிடைக்க முடியவில்லை போல எனக்கு தோன்றுகிறது அத்துடன் யார் வென்றார்கள்? யார் தோற்றார்கள்? என்பது விசயமல்ல இந்த படம் சமூகத்திற்க்கு எவ்வளவு முக்கியமானது என்பதுதான் முக்கியம். ஒரு நாட்டினுடைய வளம் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அதனை மற்றைய நாடுகள் சூறையாடுவதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூறியுள்ளது.
                   
                அத்துடன் எனது இந்த விமர்சனத்தை முடித்துக்கொள்கிறேன்.நீங்களூம் பார்க்க வேண்டும் என்பதற்காக நானே எல்லாத்தையும் சொன்னால் அதிலே ஒரு கிக்கும் இருக்காது.
                             என்றும் (MS)
                        **********      **********