போலிப்போராட்டம் தேசத்துக்கா! தேகத்துக்கா!

  • 0
பலநல்ல கற்க கடைந்தும் மனம் நல்லார் 
ஆகுதல் மாணார்க்கு அரிது 

என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப வாழுபவர்களே அதிகம்

ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்தும் எந்த தலைவரையும் கேட்டுப்பாருங்கள் எதற்கு இந்த அணிவகுப்பு ஏன் இந்த கோஷம் கொடிபிடிப்பு கலாட்டா?

உடனே மைக்கை பிடித்து உலகத்துக்கு அறிவிப்பார்கள் எங்கள் அற போராட்டம் (அல்லது இந்த அவல நிலை,குறைகள்,கோரிக்கைகள் ) இவை குறித்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு ஊர்வலம் நடத்துகிறோம்  என்று
முக்கிய வார்த்தையாக கவனத்தை ஈர்ப்பதற்கு.கவனத்தை ஈர்ப்பதற்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன


முக்கியம் கவனத்தை ஈர்ப்பதற்கு ஆக நடத்தப்படும் கலகங்களில் அவர்கள் தங்களது கவனத்தை இழந்து விடுகின்றனர் உலகமே நோக்கும் கலகங்களை உருவாக்குபவர்களே தங்களை உலகம் கவனிக்கும் என்றதை மறந்து உதவாதவர்கள் ஆகின்றனர்

எனது வெளிநாட்டு நண்பர்களை இக்காலப்பகுதியில் நான் கண்டது அதிகம் அவர்களிடம் இதை பற்றி நாட்டு மக்களை பற்றி நடத்தப்படும் போராட்டங்களை பற்றி விசாரிக்கும் போது அவர்கள் சொன்னதை கேட்டு திகைத்தேன் சிந்தித்தேன் அன்று எடுத்த முடிவுதான் இது எம் இனத்தில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடத்தப்படும் உண்மை நாடகமும் இதுவே இதன் விளைவே இந்த பதிவின் உருவாக்கம்

அவர்கள் சொன்னார்கள் நண்பா எல்லாம் எங்கள் ஆக்களின் சந்தோசத்துக்கு என்று


வேளைகளில் இருந்து விடுமுறை எடுக்கவும்
மது,மாது போன்ற பாவனைக்களுக்குமே


போராட்டம் என்ற பேரில் போர்த்தப்படும் போர்வையை பயன்படுத்தி தேகத்திற்கு உருவாக்கப்படும் ஒரு சந்தோசமே என்று


நாட்டு மக்கள் நாடு படும் பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி அதில் குளிர்காயும் புலம் பெயர் வாழ் மக்களே உங்கள் நாட்டு பற்று உண்மை எனில் உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் ஆவது இருங்கள்

இது அனைவருக்கும் அல்ல ஒரு சில நாதாரிகளுக்கே

கண்ணா உலகம் இன்று சுருங்கி விட்டது வெளி உலகிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து செய்து கொண்டு இருக்கும் சமூக விரோதிகளே இனியாவது செய்வன திருந்த செய்யுங்கள்

பலருக்கு பெரிதும் அனுதாபங்கள் தேவைப்படுகின்றன தங்களை பிறர் கவனிக்க வேண்டும் என்று விரும்பிகள் அதை நிறைவேற்றி கொள்ளும் பொருட்டு ஏதாவது மனக்குறை நோயை வரவழைக்கின்றனர்.தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நண்பர்களும் தங்களை அலட்சியம் செய்வதாக அவர்கள் உணர்ந்து இது போன்ற உள்மன தேவைகளை பெறும் பொருட்டு இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்


அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களிடம் கூட இருக்கும் நல்ல எண்ணங்கள் இங்கிருந்து நாட்டு மக்கள் படும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் பார்த்து வெளி நாடுகளுக்கு சென்றவர்கள் கூட இல்லை (அவர்கள் தான் படு மோசம்)

இது போன்ற உள்மன (மது,மாது) தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினால் வேறு பேரில் ஏதாவது நிகழ்வுகளை நடாத்தி அதை நினைவேற்றி கொள்ளுங்கள் உங்கள் நாட்டின் பேரிலும் உங்கள் உறவினர்கள், உடன்பிறப்புகளின் பேரிலும் போலியான போர்களை தொடுத்து ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்

உங்களுடைய சொந்த உலகத்தில் பூ பூக்க வேண்டும் என்று நினைத்தால்  ஒவ்வொரு மனிதனின் கவனத்தேவையையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் கவனம் செலுத்துபவர் போல் தோற்றமளித்தால் மட்டும் போதாது வெளி உலகிற்கு உங்கள் போலிப்போர்வையை மூடி மறைக்க பாருங்கள்

இக்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும் அதிகம் தங்களை புகழ வேண்டும் என்று நினைத்து போராட்டங்களை நிகழ்த்துவோர் உங்களை விமர்சிப்பவர்கள் தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் உணர்சிகளை வெளிக்காட்டுகின்றனர்

சமூக சாதனங்கள் (மீடியா) உங்களை விமர்சித்து சுக்குநூறாக்குவதன் மூலம் விமர்சகர்கள் தங்களை உயர்த்தி கொள்கின்றனர்  (அவர்களே உங்களை சில நேரம் தூண்டி விட கூடும் )

இதுதான் இன்றைய உலகம்,

உலகம் உங்களை நோக்குகிறது மறக்காதீர்

தங்கள் போராட்டங்களை நடத்தி படங்களை எடுத்து நாட்டு மக்களுக்கு அனுப்புவோர் இவ்நாட்டில் மக்கள் ஒன்றும் தெரியாதவர் என்று நினைக்காதீர் நீங்கள் செய்யும் போராட்டங்களின் அச்சுமுதல் ஆணிவேர் வரை இன்றைய மக்கள் நன்கு அறிவார்

அவர்களில் சிலர் நாட்டு மக்கள் தங்கள் மகன் ,மகள் போராட்டம் நடத்தினார்கள் என்று பீத்தி அடிப்பவர்களும் உள்ளனர் இல்லை என்று இல்லை இனியாவது கொஞ்சம் திருந்துங்க


அன்புள்ள போராட்டகாரர்களே நீங்கள் 1000 பேர் தேவை இல்லை 10000 பேர் தேவை இல்லை ஒருவர் செய்தாலும் உண்மையும் உன்னதத்துடனும் செய்யுங்கள்

இயங்கும் சக்தி சிறியதாய் இருப்பினும் பெரிய பொருளையும் நகர்த்திவிடும் -எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்தில்

எதிர்ப்பு சக்தி = கெட்ட நபர்கள்

காந்தி கூட சுதந்திரம் பெற்றது தனி மனிதராகத்தான்

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன் கண் விடல்

இது எல்லோர்க்கும் அல்ல ஒரு சில மக்களுக்கே

படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை

இரைதேடலின் ஈரம்!

  • 1




கெர்ரி வண்டர் வேல்ட் (GERRY VAN DER WALT) என்பவர் புகழ் பெற்ற புகைப்பட கலைஞ்ஞன் காமெராவை கழுத்தில் போட்டுக்கொண்டு அவர் காடு மேடு எல்லாம் அலைவார் அந்த அலைதலின் முடிவில் அற்ப்புதமான படங்கள் அவரது கேமரா சிக்கியிருக்கும் இப்படி 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள் தென்னாபிரிக்கா காட்டுக்குள் புகுந்தார் அங்கு ஒரு வேட்டையாடலை அவரது கேமரா விழுங்கத் தொடங்கியது


பெரும் பசியோடு மான் ஒன்றை துரத்தியது பெண் சிங்கம் மானும் தன்னால் இயலுமட்டும் ஓடிக்கொண்டே இருந்தது சிங்கம் கலைத்தாலும் மானை வேட்டை யாடுவதேன்றே உறுதியாக இருந்தது கடைசியில் மானின் தப்புதல் பற்றிய கனவு சிங்கத்தின் கடைசிப்பாச்ச்சலில் தகர்ந்தது தனது முழுப்பலத்தையும் பிரயோகித்து ஒரே பாச்ச்சலில் மானின் கழுத்தை கவ்வியது



மான் துடிதுடித்தபடி விழுந்தது இனி ஓட இடமில்லை காயத்தோடு ஓடினாலும் சிங்கத்திடமிருந்து தப்ப இடமில்லை அதனால் அமைதியாக சாவை சந்தித்தது ஏற்கனவே சிங்கத்துக்கு பெரும் பசி மானின் மரணத்தின் பின்பு ஒரு நொடியும் தாமதிக்க அது விரும்பவில்லை எவ்வளவு வேகமாக மானை குதற முடியுமோ அவ்வளவு வேகமாக சதைத்துண்டுகளை தன வயிற்றுக்குள் செலுத்தியது அப்போதுதான் சிங்கம் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்தது



அந்த பெண்மானின் வயிற்றுக்குள் குட்டி இருப்பதை காண நேர்ந்தது.அவ்வளவுதான் வாயில் கௌவியிருந்த சதைத்துண்டை கீழே போட்டு விட்டு அந்த குட்டியை வெளியே மீட்டெடுத்து ஆனாலும் பூரண வளர்ச்சி பெறாததாலும் அந்தக்குட்டி கருப்பையை விட்டு வெளியே வந்த தருணத்தில் இருந்து உயிருக்காகப் போராடத்தொடங்கியது.

சிங்கத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை மான் குட்டியை காப்பாற்ற வேண்டுமென்ற தவிப்போடு அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது யாரிடமாவது உதவி கேட்கும் பாவனை அந்த ஓட்டத்தில் தெரிந்தது பெண் மானை கலைத்த போது இருந்த மிடுக்கும் வெறியும் இப்போது சிங்கத்தின் ஓட்டத்தில் இல்லை ஒரு உயிரை காப்பாற்றவேண்டும் என்ற தவிப்பே அதிகமாக இருந்தது






ஒரு பக்கம் ஓடி விட்டு பின்னர் அதே வேகத்தோடு திரும்பிவந்து மான் குட்டியை முகர்வதும் கண்களை அங்கும் இங்கும் அலைய விடுவதுமாக சிங்கத்தின் போராட்டம் தொடங்கியது மானை வேட்டையாடுவதில் வென்றிருந்த அந்த சிங்கம் மான் குட்டியை காப்பாற்றும் போராட்டத்தில் தோற்க்கவேண்டியிருந்த்து.ஒரு கட்டத்தில் சிங்கம் முகர்ந்து பார்த்த பொழுது மான் குட்டி உயிர் அற்றுப்போயிருந்தது பின்னர் குட்டியையும் மானையும் பார்த்த படி நீண்ட நேரம் அப்பிடியே உர்க்காந்திருன்தது ஒரு கட்டத்தில் சிங்கம் சரிந்து விழுந்தது

இதை எல்லாம் ஒன்றும் விடாமல் பதிவு செய்த ஜெர்ரி யும் அவரது குழுவினரும் சிங்கம் கீழே விழுந்தவுடன் ஓடிச்சென்றனர் அங்கே வெழுந்து கிடந்த சிங்கத்துக்கு உயிர்கொடுக்க முயன்றும் பலன் அளிக்கவில்லை

ஒருபக்கம் வாட்டிய பசியை சமாளிக்க முடியாமலும் தாயையும் குட்டியையும் கொன்ற குற்ற உணர்ச்சியாலும் இரையை உண்ணாமல் தன்னையே நொந்து மடிந்து போய்க்கிடந்தது அந்த பெண் சிங்கம்


இயற்கையின் விதிகளை மீறி தாய்மை பரிதாபம் சிறுசுகள் மீதான கருணை என்ற உணர்வுகள் ஐந்தறிவு படைத்த ஒரு ஊனுண்ணி விலங்கின் நெஞ்சத்தை கூட கரைத்து விடுகின்றன அனால் மனிதர்கள் மாத்திரம் தங்களுக்கு மட்டுமே இருப்பதாக மார்புதட்டிகொள்ளும் மனிதத்தை அடகு வைத்து விட்டு மிருகங்களாக மாறிகொண்டிருக்கிறார்கள் சில வேளைகளில் அத்தகைய கொடூர மனிதர்களாக தங்களுடன் ஒப்பிடுவதற்காக வேலன்குகள் கோபித்துகொள்ளக்கூடும்.மனித்து கொள்ளுங்கள் விலங்குகளே




ஆனால் ஒரு ஐந்து அறிவு ஜீவனுக்கு உள்ள குற்ற உணர்வு கூட ஆறு அறிவு மனிதனுக்கு இல்லையே!!!!!

"
மனிதம் என்றோ மரணித்து விட்டது "




Man vs Wild-டிஸ்கவரி

  • 0
டிஸ்கவரி சனலை பார்ப்பவர்கள் உண்டா?
இருந்தால் உடனே கையை தூக்கவும்! இனி என்ன செய்ய தூக்கிய கையை கீழே வைத்து விட்டு மிகுதியை வாசியுங்கள்

என்ன ஒரு அழகான தமிழ் சனல் சும்மா சன் டிவி ,கே டிவி,விஜய் டிவி என்று எத்தனையோ தமிழ் சானல்களுக்கு மத்தியிலும் தமிழை தமிழாக காட்டிநிக்கின்றது இந்த அந்நிய டிவி தமிழ் சானல்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 5 மணித்தியாலம் எதோ ஆங்கிலத்தில் அலட்டுவார்கள் மிச்சம் இருகின்ற நேரங்களில் எதோ பாட்டு பாடுவார்களாம் (சூப்பர் சிங்கர்) சாப்பிட்டு திமிர் முறிக்கின்ற வேலை அது

டிஸ்கவரி சனல் பார்ப்பவரா நீங்கள்? (தமிழில்கூடப் போட்டபிறகும் அதைப்பார்க்காமல் ‘தங்கம்’ பார்ப்போர் மேலே தொடரவேண்டாம்.) அதில் ஒளிபரப்பாகும் Man vs Wild பார்ப்பதுண்டா? 


பியர் கிரில்ஸ் என்னும் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் நாம் மனித உதவிகளற்ற வனாந்தரங்களில் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்து உயிர்தப்பலாம் என்று உலகத்தின் ஒவ்வொரு மரணப்பொறிகளிலும் விழுந்து விழுந்து எழுந்துகாட்டுகிறார். நாளைக்கே வாழ்க்கை நம்மையும் ஒரு மரணப்பொறியில் மாட்டிவிடலாம் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அதைப்பார்த்து வாழ்க்கையின் சவாலை ஏற்கத் தயாராகலாம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். அல்லது கயிறு, கிறபிக்ஸ், மற்றும் டூப்களின் உதவியொடு செய்து காட்டினாலும் ஒரு தனி மனிதனாக இன்று அதை செய்வது போற்றத்தக்கது


அவர் உயிரோடு தவளை பாம்பு என கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ கற்று தரும் நிகழ்ச்சி மிக புகழ் பெற்றது
மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன்

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு விதி முடிஞ்சி போச்சின்னு அர்த்தம்டா!!

இப்படி பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்க்கிறதை விட்டுட்டு எது டான்சு,பாட்டு நிகழ்ச்சிகளை பாத்து கொண்டே இருங்கடா நாடும் வீடும் விளங்கிடும்
இந்த பதிவை நான் இடக்காரணம் நான் பார்த்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு அசரீதி திரும்பிப்பார்த்தால் வேற யார் ?

இதுகளை பார்க்கிறதை விட்டுட்டு போய் படிக்கிற வேலையை பார்
பிறகு என்ன நடையை கட்டியதுதான் அதன் பிறகு மாமியார் மருமகள் அடிபாடுதான் (நாடகத்தை சொன்னேன்)