இங்கிலாந்தில் இந்தியா+நண்பர்களுக்கு மத்தியில் நான்

  • 0

அனைத்து போட்டிகளும் முடிவுறும் வேளையில் உங்களை ஒரு இடுகையில் சந்திப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது அந்த வகையில் எனது கணனியில் ஏற்ப்பட்ட பிழைகளை எல்லாம் திருத்தி முடித்து விட்டு ஒரு புதிய பதிவை எனது இந்தியாவுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் அந்த வகையில் இந்தியா அணி இங்கிலாந்து மண்ணில் படும் தோல்விகளை சிறு அலசல் போட்டிருக்கின்றேன் (வெட்டியாய் வீட்டில் இருந்த நாட்களில்)


              
                              இந்தியா அணியை பொறுத்த வரையில் அனைத்து தொடர்களிலும் தோல்விகளை சந்தித்து வருகின்றது அந்தவகையில் இங்கிலாந்து மண்ணில் வைத்து தனது டெஸ்ட் போட்டிகளிலும் 20 -20 போட்டிகளிலும் அத்துடன் நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற ஒருநாள் தொடரிலும் தோல்வியை சந்தித்துள்ளது நடப்பு சாம்பியனான இந்தியா இவ்வாறு ஒரு தோல்வியை அடைந்து உள்ளது (வெளில தலை காட்ட முடியாது) அத்துடன் என்னை காணும் நண்பர்கள் எல்லாம் என்னடா இந்தியா?(என்ற நக்கல்) நானும் எத்தினை நாளைக்கு உலக கோப்பையை வைத்து தப்பித்து கொள்வது (முடியுமானளவு தப்பித்து கொண்டிருக்கின்றேன்)

                                  இவ்வாறு இடைஞ்சலுக்கு மத்தியில் நானும் இந்தியாவும் அத்துடன் நண்பர்களுக்கு மத்தியில் நான் அத்துடன் இந்தியாவின் பெருமைகளை கதைக்காத நண்பர்கள் கூட ஒரு நக்கல் பார்வையில் நடை நடக்கின்றனர் பொறுக்க முடியலே...........................



**************************************

 டெஸ்ட் போட்டிகளை பற்றி போன இடுகையில் எனது கருத்துக்களை நான் தெருவித்திருந்தேன் அத்துடன் அதில் இடாத சில குறிப்புக்களையும் அத்துடன் ஒருநாள் போட்டி பற்றிய சில குறிப்புக்களையும் இட்டுள்ளேன் 
டெஸ்ட் :

                   
                                       ஆடிப்போன இந்தியர்களை அதிரவைக்கும் அரங்கில் களமிறங்கிய இந்தியா அணி ஆரம்பம் முதல் தனது தவறுகளாலும் வீரர்களின் இடை விலகளாலும் அடக்கி வாசிக்க வேண்டி நிலை ஏற்ப்பட்டது அத்துடன் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியில் இருந்தும் இங்கிலாந்து பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல் தவித்துவந்தது அதிலும் டிராவிட் சிறப்பாக செயற்பட்டு வந்தார் அத்துடன் பிரவீன் குமார் சொல்லும் படியாக இல்லாவிட்டாலும் சிறப்பாக பந்து வீசியிருந்தார் அத்துடன் கடந்த வருடம் தனது இரண்டாம் இன்னிங்க்ஸ் துடுப்பாட்டத்தால் பல வெற்றிகளை குவித்த் லச்மன் இந்தியாவின் ஒரு இன்னிங்க்ஸ் தோல்வியை கூட தவிர்க்க முடியாமல் போனது அதிலும் சச்சின் ஒரு சதம் கூட அடிக்காமல் போனது கவலை அளிக்கின்றது 
அதிலும் சகீர்கான் இல்லாத இந்தியா அணியா நினைத்து கூட பார்க்க முடியவில்லை இருப்பதே ஒரேஒரு அனுபவ பந்து வீச்சாளர் நான் கடந்த குறிப்பில் இந்தியா அணியின் டெஸ்ட் போட்டி பற்றி கூறியிருந்ததால் இங்கு பெரிதாக கூறவில்லை 

ஒருநாள் போட்டி ;
                     அமர்க்களமாக தொடங்கிய இந்த தொடர் ஆசையுடன் காத்திருந்தேன் இந்தியாவின் மேல் ஒரு கண்ணை அதிலும் குறிப்பாக மழையின் விளையாட்டோ அபூர்வமாக இருந்தது (இவ்வாறு யார் விளையாடியதையும் பார்த்ததில்லை) நான் அதிலே பார்த்தது மழை தான் கூட முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்தியா அணியை அடக்கியது அபூர்வ மழை இந்தியா அணியை பொறுத்த வரையில் இந்தியாவில் மிக சிறந்த துடுப்பாட்ட பலத்துடன் காணப்படுகின்றது இதனையும் அதில் பெற்ற தோல்வியையும் வைத்து இந்தியா அணி எதிலாவது வெற்றி பெற்று விடும் என்பது எல்லோரது கருத்தாக இருந்தது

                    

                            இந்தியா அணியில் ஒரு ஆரம்ப இளம் வீரராக சோபித்துவருகின்றார் ரஹென அத்துடன் அவரது துடுப்பாட்டத்தை பார்க்கும் பொழுது சேவாக் தேவையோ என்ற  சிந்தனை அற்ப்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தி இருக்கின்றான் இந்த ஒருநாள் தொடரில் அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் கலக்கிய டிராவிட் ஒருநாள் போட்டிகளின் சொதப்பி வருகின்றார் அத்துடன் இளம் வீரரான கொஹ்லி யும் கூட அந்தவகையில் ரெய்னா,டோனியும் தமது பொறுப்புக்களை உணர்ந்து தமது கடைமைகை செய்து வருகின்றனர் அத்துடன் பார்த்திவ் படேல் ஒரு சில போட்டிகளில் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து இருக்கின்றார் இந்த தொடர் முழுவதும் இந்தியா அணியினர் எட்டு பேர் இடைவிலகினர் என இந்தியாவின் அணித்தலைவர் கூறியிருப்பது,இந்தியா அணியில் முக்கிய வீரர்கள் இல்லாதது தோல்விக்கு காரணமாக இருக்குமென நான் கருதுகின்றேன் மீண்டும் தொடர்கள் முழுவது முடிவடைந்த பின்பு உங்களை ஒரு புதிய இடுகையில் சந்திக்கின்றேன்

எங்கிருந்து வருகிறார்கள்!................

  • 0

              சிலர் ஆக்குவதற்காக சிலர் அழிப்பதற்காக பிறக்கின்றார்கள் என்னும் சிலர் கூட இருந்து குழி பறிப்பதற்காக பிறக்கிறார்கள் ஒரு சிலர் உதவி செய்வதற்காக வந்து உபத்திரம் செய்கின்றார்கள் அந்தவகையில் இந்த பூமியில் எத்தனை வித மனிதர்கள் அவர்களின் எத்தனை வித சிந்தனைகள் என்றிருக்க கூடப்பிறந்த பழக்கவழக்கங்கள் கூட
    
         இன்றைக்கு எனது கணணியை சந்தோசத்துடன் open செய்து சில நிமிடம் முகப்புத்தகம் அத்துடன் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு மின்னஞ்சலை சரி பார்த்து பின்பு ஒரு சிறு தூக்கம் இன்றைக்கு வேற எமது கிராமத்தில் பெரு மழை அத்துடன் ஒரு வழியாக நண்பன் வீட்டை சென்று பின்பு எனது நண்பர்களுடன் மழை என்ற காரணத்தால் வெட்டி பேச்சு சில மணித்தியாலங்கள் இவ்வாறு இளமையை ஒரு அனுபவிப்பு (வாலிப வயது ; அனுபவி ராஜ அனுபவி).முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தனியார் வகுப்புக்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் எனது கணணியை open செய்தேன் (என்ன ஒரு அதிசயம்,இது தான் ஒவ்வொரு நாளும் நடை பெறுவது).


           
                           நான் இன்றும் வழமையாக செய்வது போல சென்று கணணி விளையாட்டுக்கள் அதை முடித்துவிட்டு எனது வன்தட்டில் உள்ள பாகம் (க,த,க,ப) open செய்தேன் திடீரென எனது கண்ணில் பட்டது ஒரு குறும் தகவல் அதை அரை குறை ஆங்கிலத்தில் வாசித்தேன் அப்பொழுது அதில் இருந்தது நான் கணனியில் நச்சுநிரல்களுக்காக இடப்பட்ட்ருந்த anti -வைரஸ் எனது கோப்புக்களை எல்லாம் அழித்து விட்டது 


திகைத்தேன் வெறுமையாக காணப்பட்டது எனது கணணி (பயிரை வேலி மேஞ்சது போல) என்னுடைய கோப்புக்களை தின்றுவிட்டது நான் எனது கணணியை shutdown செய்து விட்டு எனது நண்பன் வீட்டில் இருந்து இந்த இடுகையை எழுதி இருந்தேன் நான் முடிவாக என்ன கூற விரும்புகின்றேன் என்றால் இந்த anti -virus மாதிரியே எமது உலகத்தில் எத்தனை மனிதர்கள் தங்களை நம்பி வந்தவர்களை கழுத்தறுக்கிறார்கள் நான் முதல் கூறியது போல மனிதர்களது சிந்தனைகள் சில நன்மைக்கும் சில தீமைக்கும் பயன்படுகின்றன.

  
குறிப்பு; கணணியை நம்பியோர் கை விடபடுவார் இது எனது வாழ்க்கை தத்துவம் (அடியேன் pc antivirus காக்க)
                மேலும் ஒன்று எனது கணணியை திருத்திய பின்பு மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கின்றேன் என்றும் ms

துர்க்கையம்மன் மகோற்சவம்

  • 0

                         29 /08 /2011 அன்று கொடிஏற்றத்துடன் ஆரம்பித்து இன்று ரதோற்சவம் நடைபெற்றது (08 /09 /2011) இந்தவகையில் எமக்கு எல்லாம் இன்று ஒரு சந்தோசமான நாள் இன்றைக்கு கண்ணை குத்தும் அழகில் பல சாமிகள் உலாவரும் நான் கூறியது பல பெண்களின் ஊர்வலம் 

           கண் விழிக்கும் போதே கடவுள் நினைவோடெழுந்து தத்தம் கடமைகளைத் தொடங்குவது நாளாந்த நிகழ்வாகும்.  அயர்ந்து தூங்கியோர் விரைந்து எழுந்ததும் அம்மன் ஆலயமணி கேட்டதா என்றே முதலில் வினவுவர். தினமும் நிகழும் மூன்று நேரப் பூசைகளுக்கும் செல்லும் பக்தர்கள் பலர் இருந்தனர்.வருடாந்த மகோற்சவ காலங்களில் ஊரே திரண்டுவிடும்.வைகாசித் திருநாளில் பிள்ளையார் ஆலயத்திலும் மார்கழித்திருவாதிரை நாளில் அம்பாள் ஆலயத்திலும் மகோற்சவம் இறைவெய்தும்.  அம்பாள் ஆலய மகோற்சவ காலத்தில் நாட்டின் எலாப் பகுதிகளிலிருந்தும் எமது மக்கள் தவறாது வந்து கூடுவர். சித்திரத் தேரில் அம்மன் பவனிவரும் திருக்கோலக் காட்சியைக் கண்டுகளிக்கும் திருநாளில் பலநூறு மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் காட்சி பக்தி பூர்வமாக இருக்கும்.துர்க்கையம்மன் ஆலயம் கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தின் முன் பின்னாக எமது ஆலயமும் எப்பிடி இருந்து வந்து இன்று 2011ஆம் ஆண்டு தனது மகோற்சவத்தை வெகு விமர்சையாக கொண்டாடி முடித்துள்ளது இதன் போது வெளி நாட்டில் இருந்து கூட மக்கள் வந்து இதனை பார்த்து தமது நேர்த்திகளை முடித்துகொண்டனர் இவ் ஆலயத்தின் தேர் திருவிழா மற்றும் சப்பறம் என்பன சிறப்பாக முடிவடைந்துள்ளது இந்த ஆலயத்தில் நடை பெற்ற உற்சவங்களை பற்றி அலசுவோம்.கொடி ஏற்றம் என ஆரம்பித்து நடுவிலே வியக்கவைக்கும் திருவிழாக்களுடன் நடை பெற்று வருகின்றது.அந்த வகையில் இன்று தனது தேர் திருவிழாவை கொண்டாடிமுடித்துள்ளது 
      
சென்றமுறை திருவிழாவின் போது என்னால் எனது நண்பர்களுடன் அதனை காண முடியாமல் போனது எனக்கு மிகவும் கவலை அளிக்கின்றது சென்ற முறை நான் ஒரு பாடசாலையில் மாணவனாக இருந்தபோது எனக்கு அன்றைய தினத்தில் ஏற்ப்பட்ட ஒரு துடுப்பாட்ட போட்டிகாரணமாக நான் அங்கு சென்று நண்பர்களுடன் அனுபவிக்க முடியாமல் போனது கவலை அளிக்கிறது (நான் எனது வாழ்வில் பாதியை இழந்து விட்டேன் )

அதற்க்கு முதல்முறையும்என்னால் அங்கு சென்று தேர் திருவிழாவை காணமுடியாமல் போனது அதற்க்கான காரணம் நான் கூற விரும்பவில்லை ஆனாலும் அதற்க்கு நான் மனம் வருந்தவில்லை ஏன் எனில் நான் மற்றைய திருவிழாவிற்கு சென்று இருந்தேன் எனது சோகக்கதை நான் கூறவில்லை இவ்வாறு பலதடவை சந்தர்ப்பம் கிடைத்தும் நான் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை (கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை). இந்த முறையும் என்னால் போக முடிய வில்லை என்னுடைய தலை எழுத்து சரியாக இல்லை