Showing posts with label எனது உரை. Show all posts
Showing posts with label எனது உரை. Show all posts

போலிப்போராட்டம் தேசத்துக்கா! தேகத்துக்கா!

  • 0
பலநல்ல கற்க கடைந்தும் மனம் நல்லார் 
ஆகுதல் மாணார்க்கு அரிது 

என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப வாழுபவர்களே அதிகம்

ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்தும் எந்த தலைவரையும் கேட்டுப்பாருங்கள் எதற்கு இந்த அணிவகுப்பு ஏன் இந்த கோஷம் கொடிபிடிப்பு கலாட்டா?

உடனே மைக்கை பிடித்து உலகத்துக்கு அறிவிப்பார்கள் எங்கள் அற போராட்டம் (அல்லது இந்த அவல நிலை,குறைகள்,கோரிக்கைகள் ) இவை குறித்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு ஊர்வலம் நடத்துகிறோம்  என்று
முக்கிய வார்த்தையாக கவனத்தை ஈர்ப்பதற்கு.கவனத்தை ஈர்ப்பதற்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன


முக்கியம் கவனத்தை ஈர்ப்பதற்கு ஆக நடத்தப்படும் கலகங்களில் அவர்கள் தங்களது கவனத்தை இழந்து விடுகின்றனர் உலகமே நோக்கும் கலகங்களை உருவாக்குபவர்களே தங்களை உலகம் கவனிக்கும் என்றதை மறந்து உதவாதவர்கள் ஆகின்றனர்

எனது வெளிநாட்டு நண்பர்களை இக்காலப்பகுதியில் நான் கண்டது அதிகம் அவர்களிடம் இதை பற்றி நாட்டு மக்களை பற்றி நடத்தப்படும் போராட்டங்களை பற்றி விசாரிக்கும் போது அவர்கள் சொன்னதை கேட்டு திகைத்தேன் சிந்தித்தேன் அன்று எடுத்த முடிவுதான் இது எம் இனத்தில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடத்தப்படும் உண்மை நாடகமும் இதுவே இதன் விளைவே இந்த பதிவின் உருவாக்கம்

அவர்கள் சொன்னார்கள் நண்பா எல்லாம் எங்கள் ஆக்களின் சந்தோசத்துக்கு என்று


வேளைகளில் இருந்து விடுமுறை எடுக்கவும்
மது,மாது போன்ற பாவனைக்களுக்குமே


போராட்டம் என்ற பேரில் போர்த்தப்படும் போர்வையை பயன்படுத்தி தேகத்திற்கு உருவாக்கப்படும் ஒரு சந்தோசமே என்று


நாட்டு மக்கள் நாடு படும் பிரச்சனைகளை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி அதில் குளிர்காயும் புலம் பெயர் வாழ் மக்களே உங்கள் நாட்டு பற்று உண்மை எனில் உதவி செய்யாவிடினும் உபத்திரவம் செய்யாமல் ஆவது இருங்கள்

இது அனைவருக்கும் அல்ல ஒரு சில நாதாரிகளுக்கே

கண்ணா உலகம் இன்று சுருங்கி விட்டது வெளி உலகிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து செய்து கொண்டு இருக்கும் சமூக விரோதிகளே இனியாவது செய்வன திருந்த செய்யுங்கள்

பலருக்கு பெரிதும் அனுதாபங்கள் தேவைப்படுகின்றன தங்களை பிறர் கவனிக்க வேண்டும் என்று விரும்பிகள் அதை நிறைவேற்றி கொள்ளும் பொருட்டு ஏதாவது மனக்குறை நோயை வரவழைக்கின்றனர்.தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நண்பர்களும் தங்களை அலட்சியம் செய்வதாக அவர்கள் உணர்ந்து இது போன்ற உள்மன தேவைகளை பெறும் பொருட்டு இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்


அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களிடம் கூட இருக்கும் நல்ல எண்ணங்கள் இங்கிருந்து நாட்டு மக்கள் படும் கஷ்டங்கள் எல்லாவற்றையும் பார்த்து வெளி நாடுகளுக்கு சென்றவர்கள் கூட இல்லை (அவர்கள் தான் படு மோசம்)

இது போன்ற உள்மன (மது,மாது) தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினால் வேறு பேரில் ஏதாவது நிகழ்வுகளை நடாத்தி அதை நினைவேற்றி கொள்ளுங்கள் உங்கள் நாட்டின் பேரிலும் உங்கள் உறவினர்கள், உடன்பிறப்புகளின் பேரிலும் போலியான போர்களை தொடுத்து ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்

உங்களுடைய சொந்த உலகத்தில் பூ பூக்க வேண்டும் என்று நினைத்தால்  ஒவ்வொரு மனிதனின் கவனத்தேவையையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் கவனம் செலுத்துபவர் போல் தோற்றமளித்தால் மட்டும் போதாது வெளி உலகிற்கு உங்கள் போலிப்போர்வையை மூடி மறைக்க பாருங்கள்

இக்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும் அதிகம் தங்களை புகழ வேண்டும் என்று நினைத்து போராட்டங்களை நிகழ்த்துவோர் உங்களை விமர்சிப்பவர்கள் தனக்குள் சேர்த்து வைத்திருக்கும் உணர்சிகளை வெளிக்காட்டுகின்றனர்

சமூக சாதனங்கள் (மீடியா) உங்களை விமர்சித்து சுக்குநூறாக்குவதன் மூலம் விமர்சகர்கள் தங்களை உயர்த்தி கொள்கின்றனர்  (அவர்களே உங்களை சில நேரம் தூண்டி விட கூடும் )

இதுதான் இன்றைய உலகம்,

உலகம் உங்களை நோக்குகிறது மறக்காதீர்

தங்கள் போராட்டங்களை நடத்தி படங்களை எடுத்து நாட்டு மக்களுக்கு அனுப்புவோர் இவ்நாட்டில் மக்கள் ஒன்றும் தெரியாதவர் என்று நினைக்காதீர் நீங்கள் செய்யும் போராட்டங்களின் அச்சுமுதல் ஆணிவேர் வரை இன்றைய மக்கள் நன்கு அறிவார்

அவர்களில் சிலர் நாட்டு மக்கள் தங்கள் மகன் ,மகள் போராட்டம் நடத்தினார்கள் என்று பீத்தி அடிப்பவர்களும் உள்ளனர் இல்லை என்று இல்லை இனியாவது கொஞ்சம் திருந்துங்க


அன்புள்ள போராட்டகாரர்களே நீங்கள் 1000 பேர் தேவை இல்லை 10000 பேர் தேவை இல்லை ஒருவர் செய்தாலும் உண்மையும் உன்னதத்துடனும் செய்யுங்கள்

இயங்கும் சக்தி சிறியதாய் இருப்பினும் பெரிய பொருளையும் நகர்த்திவிடும் -எதிர்ப்பு சக்தி இல்லாத பட்சத்தில்

எதிர்ப்பு சக்தி = கெட்ட நபர்கள்

காந்தி கூட சுதந்திரம் பெற்றது தனி மனிதராகத்தான்

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன் கண் விடல்

இது எல்லோர்க்கும் அல்ல ஒரு சில மக்களுக்கே

படங்கள் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை

Man vs Wild-டிஸ்கவரி

  • 0
டிஸ்கவரி சனலை பார்ப்பவர்கள் உண்டா?
இருந்தால் உடனே கையை தூக்கவும்! இனி என்ன செய்ய தூக்கிய கையை கீழே வைத்து விட்டு மிகுதியை வாசியுங்கள்

என்ன ஒரு அழகான தமிழ் சனல் சும்மா சன் டிவி ,கே டிவி,விஜய் டிவி என்று எத்தனையோ தமிழ் சானல்களுக்கு மத்தியிலும் தமிழை தமிழாக காட்டிநிக்கின்றது இந்த அந்நிய டிவி தமிழ் சானல்களில் 24 மணித்தியாலங்களில் சுமார் 5 மணித்தியாலம் எதோ ஆங்கிலத்தில் அலட்டுவார்கள் மிச்சம் இருகின்ற நேரங்களில் எதோ பாட்டு பாடுவார்களாம் (சூப்பர் சிங்கர்) சாப்பிட்டு திமிர் முறிக்கின்ற வேலை அது

டிஸ்கவரி சனல் பார்ப்பவரா நீங்கள்? (தமிழில்கூடப் போட்டபிறகும் அதைப்பார்க்காமல் ‘தங்கம்’ பார்ப்போர் மேலே தொடரவேண்டாம்.) அதில் ஒளிபரப்பாகும் Man vs Wild பார்ப்பதுண்டா? 


பியர் கிரில்ஸ் என்னும் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் நாம் மனித உதவிகளற்ற வனாந்தரங்களில் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்து உயிர்தப்பலாம் என்று உலகத்தின் ஒவ்வொரு மரணப்பொறிகளிலும் விழுந்து விழுந்து எழுந்துகாட்டுகிறார். நாளைக்கே வாழ்க்கை நம்மையும் ஒரு மரணப்பொறியில் மாட்டிவிடலாம் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அதைப்பார்த்து வாழ்க்கையின் சவாலை ஏற்கத் தயாராகலாம், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். அல்லது கயிறு, கிறபிக்ஸ், மற்றும் டூப்களின் உதவியொடு செய்து காட்டினாலும் ஒரு தனி மனிதனாக இன்று அதை செய்வது போற்றத்தக்கது


அவர் உயிரோடு தவளை பாம்பு என கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு உயிர் வாழ கற்று தரும் நிகழ்ச்சி மிக புகழ் பெற்றது
மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன்

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு விதி முடிஞ்சி போச்சின்னு அர்த்தம்டா!!

இப்படி பயனுள்ள நிகழ்ச்சிகளை பார்க்கிறதை விட்டுட்டு எது டான்சு,பாட்டு நிகழ்ச்சிகளை பாத்து கொண்டே இருங்கடா நாடும் வீடும் விளங்கிடும்
இந்த பதிவை நான் இடக்காரணம் நான் பார்த்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு அசரீதி திரும்பிப்பார்த்தால் வேற யார் ?

இதுகளை பார்க்கிறதை விட்டுட்டு போய் படிக்கிற வேலையை பார்
பிறகு என்ன நடையை கட்டியதுதான் அதன் பிறகு மாமியார் மருமகள் அடிபாடுதான் (நாடகத்தை சொன்னேன்)

வாழ்த்துக்கு நன்றி,இப்படிக்கு மோசி

  • 1

என் எல்லா பங்காளிங்க, செல்லக் குட்டிங்க. டார்லிங்குங்க. தங்கச்சிங்க, அண்ணங்க,, தம்பிங்க,அக்காங்க,, அம்மா, ஆட்டுக் குட்டி எல்லாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்த தெரிவிக்க இருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளவும் இப்படிக்கு

ஹன்சிகாவின் முன்னாள் காதலரும்
பாவனாவின் இன்னாள் காதலரும்
கயாலகர்வாளின் கணவருமான
மோசியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


பூமியின் பிறந்தநாள் என்றென சொல்லவா காதலின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா


யாருக்காவது பார்ட்டி வேணுமெண்டால் இந்த முகவரிக்கு வந்து என்னுடன் பகிரிந்து கொள்ளுங்கள்

இடம்;-
பேஸ்புக்
பேஸ்புக் மெயின்ரோடு,
த்விட்டேர் குறுக்குச்சந்து,
விவேகானந்தர் தெரு,
பேஸ்புக்.

இத்தருணம் தங்கள் நல்வரவை நாடும்
MS


அம்மாவின் பிறந்தநாள்

  • 0

அம்மாவின் பிறந்தநாள்

I love my Mom

என்ன அம்மாவை பற்றி பேசுறேன்னு யோசிக்கறிங்க‌ போல ஆமாங்க இன்று ரொம்ப முக்கியமான நாள் எனக்கு...

இன்று என் அம்மாவின் பிறந்த நாள்!!!

அம்மாவாய் மட்டும் அல்ல இன்று வரை எனக்கு நல்ல தோழியாகவும் என்னை வழிநடத்துபவர்!!!


அம்மாவின் பிறந்தநாள்

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!
என்ற முத்தான வரிகளை கேட்டவுடன் மூச்ச்டைந்து நின்றேன்.

என்னை சுவாசிக்க வைத்த
அவளுக்காக நான்
வசித்த முதல் வார்த்தை
"அம்மா".


அம்மாவின் 48 வது அகவைக்காலம் சிறப்பாக இருக்க 
இறைவனை வேண்டி நிக்கிறேன் என்னால் அம்மாவுக்கு உதவிகள் தான் செய்ய முடியாமல் போனாலும் உபத்திரம் செய்ய கூடாது எண்டு நினைத்துக்கொண்டு இந்த வாழ்த்துரையை எழுதுகிறேன்.

                      நான் வாழும்வரை,உன்னையும்வாழவைப்பேன்

உலகில்
அனைத்துக்கும்
வரையறை வைத்திருக்கும்
அந்த கடவுள்,
உன்னை அழைத்திடவும்
உன் புகழ் பாடிடவும்
என்னை கோடிட்டு
நிறுத்தி விடவில்லை!


மூன்றே சொற்களில்
பலநூறு பூக்களின்
வண்ணமாய்
என்னில் கலந்த‌
என் தேவதை
அம்மா!!!

(இன்று என் அம்மாவின் பிறந்தநாள்.. அவர் என்றும் நலம் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்..அம்மாவுக்காக ஒரு சின்ன சமர்பணம்...)

பிக் மேட்ச் ஒரு கதை (big match)

  • 0
பிக் மேட்ச் ஒரு கதை

           எங்களுடைய கல்லூரிக்கதையை கனாக்காணும் காலங்கள் (விஜய் t.v)கூட கைகட்டி நின்று பார்க்க வேண்டியதுதான் எவ்வளவு சுகம் எவ்வளவு ஆனந்தம் நினைத்தாலே மனம் குளிருகின்றது


                 இது எனது இந்த இடுகையின் ஆரம்பம்


கல்லூரியின் இறுதி ஒரு சில படிகளில் நாம் தவழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில் எமக்கு கிடைத்த ஒருசில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று அதுதான் இந்த பிக் மேட்ச்.காலத்தின் வேகத்தில் நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றது அதிலே எனது இந்த அனுபவத்தை தெருவிக்கின்றேன் நாங்கள் மேட்ச் பார்த்ததை விட ரோட்களில் (road) அடிதடிகளை பார்த்தது தான் அதிகம் அதிலே சில நண்பர்கள் எங்களுடைய படச் (batch) இல கமெடி பீசுகள் அதிலும் குளறிக்கொண்டு திரிவதில் அவர்களை அடிக்க ஆஸ்திரேலியாவிலும் ஆட்கள் இல்லை (சத்தியமா நான் இல்லை)


இன்னும் சில காலங்களில் நாங்கள் எமது ஸ்கூல் ஜுனிபோம்களை கழட்ட வேண்டிய காலம் வந்து விடும் முடிவோட குதித்தேன் இந்த விடயத்தில்


அன்று திங்கட்கிழமை என்று நினைக்கின்றேன் (இப்பவே மறந்து போச்சு வருங்காலத்தில்) ஸ்கூல் சென்றேன் ஒரே அதிசயம் பான்ட் ஒன்றுடன் சில நண்பர்கள் நடு வீதியில் திகைத்தேன் சிந்தித்தேன் தோன்றியது


 பிக் மேட்ச் என்று அன்றில் இருந்து இன்று வரை ஸ்கூல் class க்கு போனதில்லை போனாலும் படித்ததில்லை (வராததை வா வா என்றால் அதுவும் நானும் என்ன செய்ய நான் கூறியது படிப்பை) திங்கக்கிழமை cap collection என்று திரிய வெளிக்கிட ஆயத்தம் ஆனோம் குழம்பியது


மறுநாள் எனது நண்பர்கள் cap collection என்ன்று வெளிக்கிட போவதாக கூறினார்கள் நான் உடனேயே வீட்ட வெளிக்கிட்டு வந்து விட்டேன் (வந்து twitter இல் செப்பா இப்பவே கண்ணை கட்டுதே என்று ஒரு tweet ) அதிலே ஒருவன் ஆபீஸ் க்குள் வெடி ஒன்றை போட்டு விட்டான் அன்றும் குழம்பியது அடுத்தநாள் ஏன் வீட்ட போனது என்று class இல் இருக்க விடவில்லை

மறுநாள் எனது நண்பர்கள் வெளிக்கிடுவதாக கூறினார்கள் அன்றும் நான் வீட்ட வந்து விட்டேன் அன்றில் இருந்து எனது சந்தர்ப்பங்களை தவற விட்டு வந்தேன் அன்று ஒரு முடிவு எடுத்தேன் எப்படியாவது மட்சுக்கு போய்விட வேண்டியது தான் என்று (அன்று எடுத்ததுதான் இந்த படங்கள்)


பிறகு எமது எதிர் அணி நண்பர்கள் (jaffna hindu college) அவர்களுடன் ஒரு அனுபவம் யாழ்பாணத்தில் எத்தனை பெண்கள் பாடசாலைகள் உள்ளதோ அத்தனை பாடசாலைகளுக்கும் சென்றார்கள் என்றுதான் கூற வேண்டும் (பார்க்கின்ற hindu மாணவர்கள் எனக்கு அடிக்க வேண்டாம்)

 (படங்கள் முகப்புத்தகத்தில் எடுக்கப்பட்டது) நன்றி யாழ் hindu நண்பர்கள்
 அதிலே சென்ற இடத்தில் ஒரு கலகலப்பு என்று science hall இல் அடிபாடு சொல்லவே இனிக்கின்றது


                       (இது நினைத்தாலே இனிக்கும் படத்தின் ரீமேக் இ விட ரொம்ப நாளாக இருக்கும் ) காதல் கதையை விட

அப்படியே ஒருமாதிரி காலங்கள் சென்று வெள்ளிக்கிழமை ,சனிக்கிழமை பிக் மேட்ச் நடந்து முடிந்தது எதிலே போட்டி சமநிலையில் முடிவடைந்தது

                   என்ன ஆனந்தம் நண்பர்களுடன் கொண்டாட்டம்

நீங்கள் ஒன்றும் அவ்வளவுக்கு கற்பனை பண்ண வேண்டாம் வாசியுங்கள் பிடித்திருந்தால் வாக்களித்து செல்லுங்கள்

முகப்புத்தகத்தில் கலாட்டா

  • 1

சிறப்பாக ஆரம்பித்த இந்நாளில் ஒரு இடுகையும் இன்றி தவித்துவந்த நேரம் எனக்கு தோன்றியது தான் இந்த காமெடி அத்துடன் அதற்க்கு உதவிய எனது நண்பன் ஆதவன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை மட்டும் அல்ல எனது நன்றிகளையும் தெருவித்துக்கொள்கிறேன் இந்த படங்களை பாருங்களேன் இதில் நான் போன இடுகையை வாசித்தேனது நண்பர்கள் யோசித்து அதன் படியே நான் பிரபல்யம் அடைய எனக்கு ஒரு நல்ல வழி காட்டித்தந்துள்ளனர் அந்தவகையில் மீண்டும் ஆதவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன் 




இந்த படங்களின் மூலம் உலகில் உள்ள பணக்காரர்கலூடு எனக்கு தொடர்பு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் அதனையும் நீங்களும் பார்த்து கொள்ளுங்கள்



































                           வாட என் பில்கேட்ஸ் (ஆதவன் ) நண்பேண்டா

பிரபல்யமா?......

  • 3
           பிரபல்யமா அது எனக்கு எனவேன்றே தெரியாது அவ்வாறு இருந்த போதும் அதனுள் எனக்கு மிகவும் இஷ்டம் அதனாலே தான் நான் இந்த பதிவர் பட்டியலில் இணைந்தேன் அத்துடன் டுவிட்டர் உலகினிலும் இணைந்தேன் அவ்வாறு இருந்த போதும் போதியளவு வரவேற்ப்பு கிடைக்க வில்லை எனக்கு பின்பு ப்ளாக் திறந்தவர்கள் எல்லோரும் தங்களின் அங்கத்தவர்களை அதிகரித்து கொண்டுள்ளனர் ஆனால் என்னால் அதனை நிறைவு செய்ய முடியவில்லை இதனுடைய காரணம் தெரிந்தவர்கள் தயவு செய்து இதனுடைய காரணங்களை கூறுங்கள் 

அத்துடன் எனக்கும் அந்த காரணத்தை தெரிந்தால் நான் இந்த காரணத்தை திருத்திக்கொள்ள முடியும் எனவே அந்த ரகசியங்களை கூறுங்கள் 




நான் நேற்று தீபாவளியை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் இருந்த போது அதில் ஒருவன் கூறியது என்னவென்றால் மோசி நீயும் ப்ளாக் வைத்திருக்கிறாய் அல்லவா அதனால் என்ன பிரபல்யம் அடைந்து விடுவியா என கிண்டல் செய்தார்கள் மணந தளராத வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல அந்த அவமானத்துடன் இந்த இடுகையை இடுகின்றேன் ஏன் என்றால் உங்களின் மீதுள்ள ஒரு நம்பிக்கையால் அதனை தயவு செய்து நிறைவேற்றுங்கள் அத்துடன் இந்த இடுகையின் பின்பு உங்களின் ஆசைகளை தெருவியுங்கள் 



என்னமாதிரி பதிவுகள் எழுத்தினால் உங்களுக்கு பிடிக்கு என்பது எனக்கு தெரியாது சினிமா ,நகைச்சுவை,காதல் ,கவிதைகள் ,வேறு ........ 






ஆனால் இந்த தளம் எனது வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை கூறுவதற்காகவும் இருந்துள்ளது என்னால் இதனையொரு பொழுதுபோக்கு சாதனமாக கருத முடியாது ஏனெனில் இதனில் சில சுவாரசியமான் விடயங்களும் உள்ளன அத்துடன் எனது மூஞ்சிப்புத்தகத்தை (facebook)பொறுத்தவரையில் அதில் சில விளையாட்டுக்களை விளையாடி பொழுதுகளை போக்கிக்கொண்டு இருக்கிறேன் அத்துடன் டுவிட்டர்இல் சில நேரம் எனது நடத்தைகளை தெருவித்துக்கொண்டிருக்கிறேன் எவ்வாறு இருந்த போதும் அதனுடைய பலனை நான் காண முடிய வில்லை ஏனெனில் அங்கு எனக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை (தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடவே இல்லை) 


அத்துடன் என்னக்கு ஒரு சில நண்பர்கள் கூறியிருப்பது என்ன வென்றால் மோசி நீ என்னும் 100 இடுகைகளை கூட இடவில்லை அதனால் தான் இப்படி என்னும் நூறு இடுகைகளை இடுவதால் உன்னுடைய கனவு நடைபெற்று விடும் என்று இப்படியான கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதிலும் சில நண்பர்கள் எனக்கு என்ன கூறியிருந்தார்கள் என்ன வென்றால் நீ பல திரட்டிகளை பயன்படுத்து என்று அதனாலும் உன்னுடைய கனவு நடைபெறும் என்று 


நான் எனது நண்பர்களுடன் இதை பற்றி பேசினால் அதில் சிலர் நீ இப்ப தானே உயர் தரம் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறாய் எனவே பிறகும் உனக்கு காலம் இருக்குது என்று அதனால் நான் மன மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் இந்த இடுகையை வைத்து நான் பதிவில் இருந்து விலகப்போவதாக நினைக்காதிர் இன்னும் எனது பனி தொடரும்............




இந்த பதிவை பார்த்தாவது என்னுடன் இணையுங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாறுங்கள் அத்துடன் தவறாமல் வாக்களித்துவிட்டு செல்லுங்கள் என்னும் ஒரு புதிய இடுகையில் சந்திக்கும் வரை விடைபெற்று செல்கிறேன்

                                                                  நன்றி...........

தீபாவளி+வெடி

  • 2

தீபாவளி திருநாளில் புத்தாடை அணிந்து, தீபங்கள் ஏற்றி இனிப்பு பலகாரங்கள் உண்டு, மகிழ்ச்சியோடு இந்த தீபாவளியை கொண்டாடுங்கள் இன்பம் பொங்கும் தீபாவளி தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி கொண்டாடுதல் என பொருள் படும் எனவே இன்று போல் என்றும் உங்களது உள்ளங்கள் ஒழி பொருந்தியவை யாக காணப்பட இறைவனை பிரார்த்திக்கின்றேன் தீபாவளி மருந்து செய்யும் முறை தீபாவளி என்றாலே வீட்டுக்கு வீடு விருந்துதான். அன்று ஒரு நாள் எல்லா வீடுகளிலும் பலகாரங்கள் இல்லையோ ஆனான் இன்று எல்லோரது வீடுகளிலும் பலகாரங்கள் கட்டாயம் இருக்கும் 


நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.தீபாவளி என்றாலே இனிமைதான். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், குமரிகள், பெரியோர் எல்லோரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருக்கும் உன்னத நாளை தீபாவளிப் பண்டிகை தருகிறது! சிறுவர்களுக்கு இணையாக யாராலும் அந்நாளை அவ்வளவு இனிமையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட முடியாது. தீபாவளி வருகிறது என்றாலே அவர்களுக்கு உற்சாகம்தான்!


தீபாவளிக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளி கழிந்து திருமணம் நடைபெறவிருக்கும் புது மணமக்கள் அடுத்த ஆண்டு தங்களது தலை தீபாவளியை எண்ணி, பூரித்து ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக கொள்வது ஒரு வகையான ரகம்.அமைதியான வாழ்விற்கு நம்மை நிரந்தரமாக அழைத்துச் செல்லும்.அதற்கு வித்தாக தீபாவளியை நினைப்போம்! கொண்டாடுவோம்!
அன்பான உள்ளங்களே என்னை தொடர்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பதில் உதவியாக இருங்கள் தவறாமல் வாக்களியுங்கள்
          மோசிகீரனின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

gather page (பயன் உள்ள இணையத்தளம்)

  • 5

இன்று யாழ்ப்பாணத்தில் அதிகம் மாணவர்களால் பேசப்படும் ஒரு தளமாக மாறியுள்ளது www.gatherpage.com இந்தவகையில் இதனால் யாழ்பாணத்தில் உள்ள பிள்ளைகள் மட்டும் அல்ல இலங்கையில் உள்ள பிள்ளைகளும் நன்மை அடைகின்றனர் ஒரு கல்விசார் தளமாக மாறியுள்ளது அந்தவகையில் இதனை ஒழுங்காக பயன்படுத்துவது மாணவர்களது கடமையாகும். 



யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் இது ஒரு பயன் உள்ள தளமாக மாறியுள்ளது அந்தவையில் இதனுடைய நிறுவுனர் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய விடயம் என்ன வென்றால் இதனுடைய நோக்கம் யுத்தத்தால் பாத்திக்கப்ப்பட்ட பிள்ளைகளுடைய கல்வி நடவெடிக்கைகளை மேம்படுத்த இவ்தளமானது உருவாக்கப்பட்டது என கூறியுள்ளார் (நல்ல விடயம் ஒன்று)


அத்துடன் இந்த தளத்தில் மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் உள்ளது என நான் நினைக்கின்றேன் அந்தவையில் இதன் மூலம் மாணவர்களது கல்வி நடவடிக்கை மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை இதில் கணக்குகளை உருவாக்கி அத்துடன் இதில் கடந்தகால வினாக்கள்,மாதிரி வினாத்தாள்கள்,பிரபல்ய பாடசாளைகளினுடைய பரீட்சை பேப்பர் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அத்துடன் இதன் மூலம் அவர்களது குறிப்புக்கள் உலக விடயங்கள் என்பவற்றையும் பார்த்துக்கொள்ள முடியும்.

இதனுடைய நன்மை ஒன்று ஆன்லைன்யில் பரீட்சைகளை செய்துகொள்ள முடியும் அதன்மூலமும் மாணவர்களுடைய அறிவு வளர்வது மட்டுமல்ல  அவர்களது தொழில் நுட்ப அறிவும் வளரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை இதனால் பலருடைய வார்த்தைகளிலும் அதிகம் பேசப்படும் தளமாக மாறியுள்ளது இந்த இணையத்தளம்.


            இதனை பயன் படுத்தி அதிக நன்மைகளை பெறுங்கள் மாணவர்களே!

களைகட்டும் காப்பியங்கள் (தீபாவளி ஸ்பெசல் )

  • 0

தீபங்களை ஏற்றி தீபத்திருநாளை கொண்டாடும் நாள் வந்தா வண்ணம் உள்ளது அந்தவகையில் தமிழர்களாக பிறந்த அனைத்து சைவர்களும் இந்த நாளில் ஏதாவது புதிதாக செய்வது வழக்கம் அவ்வாறே இந்த வருடமும் என்ன ஸ்பெசல் உள்ளது என்பதே எமது கேள்வி அந்தவையில் இந்த முறை விஜெய் மற்றும் சூர்யா நடிப்பில் வருகின்ற படங்கள் வேலாயுதம் மற்றும் ஆம் அறிவு அந்த வகையில் இந்த இரு படங்களிலும் உள்ள ஸ்பெசல் என்ன?(மக்களால் விரும்பப்படுவதன் நோக்கம் என்ன) அதிலும் தனுசின் நடிப்பில் வெளியாகும் மயக்கமென்ன படத்திலும் இவ்விரண்டு படங்களும் பெரிதாக பேசப்படுவதர்க்கான காரணங்கள் என்ன?


 இதிலும் இந்த முறை யாழில் உள்ள திரையரங்குகளில் ஏற்ப்படுத்தும் மாற்றம் என்ன? யாழில் உள்ள திரையரங்குகளில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படத்தின் கட்அவுட் வைத்து காணப்படுகிறது (ராஜா,மனோகரா,செல்லா,)இவ்வாறான திரையரங்குகளில் அந்தவகையில் அதில் இருக்கும் சுவார்சியங்களை ஆராய்வோம்


ஏழாம்அறிவு படம் அதிகளவு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக காணப்படுகிறது அதில் இருக்கும் சிறப்புக்களை ஆராய்வோம் 

சூரியா,ஸ்ருதி நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உதயநிதி தயாரித்த 7 ஆம் அறிவு படம் தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது..இந்தப் படத்தின் கதை இதுவரை உலக சினிமா ச‌ரித்திரத்திலேயே சொல்லப்படாதது என சூளுரைத்திருக்கிறார் முருகதாஸ்.7ஆம் அறிவுக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைத்துள்ளார். அவ்வாறு பெரிதும் எதிர்பார்ப்பின் மத்தியில் அந்தப்படம் 


அத்துடன் வேலாயுதம் படத்தின் சிறப்புக்களை விட மக்களின் கருத்துக்களை பற்றி ஒரு அலசல்

ஆறு கோடி மக்களின் அதிபதி எங்கள் இளைய தளபதி.வேலாயுதம் வெற்றி பெற வாழ்த்தும் அன்பு நெஞ்சம் ******.தமிழ் மக்களின் காவலன்.வருங்கால தமிழகம் வாழ்க வாழ்க....... அடுத்த சுப்பர் ஸ்டார் இளைய தளபதி

இது மறுபடியும் தலைவர சூப்பர் ஸ்டார்னு நிருபிக்ற படமா அமையும் அப்டின்றதுல சந்தேகமே இல்ல. எப்பவுமே எங்க அண்ணன் தான் டாப் ஐ லவ் மை விஜய் அண்ணா கலக்குங்க... நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் நம் தளபதி படை தோற்பின் எப்படைவெல்லும்

சூப்பர் மனிதர் அண்ட் விஜயன்ன நிங்கதான் சூப்பர் ஹீரோ உங்க பாடம்தான் ரெப்ப புடிக்கும்


ஒரு ரீமேக் படத்தை திரும்ப 100 நாள் ஓட வைப்பது உன்னால் மட்டும்முடியும். ஆல் தா பெஸ்ட் விஜய்

எப்படி படம் இருந்தாலும் தளபதி தளபதிதான்.விஜய் அண்ணா நீங்க என்ட உயிர் நாங்க எல்லாம் இருக்கும் மட்டும் உங்கள ஒருவரும் அசைக்க முடியாது

சூப்பர் விஜய் நீங்கள். இந்த படத்தின் ரீமேக் சூப்பர் ஆகா இருந்ததை விட இந்த படம் சூப்பராக இருக்கும் . என்னுடையவாழ்துக்கள்.

இவ்வாறு பலதரப்பட்ட கருத்துக்களை பார்த்தோம் அத்துடன் தீபாவளி வாழ்த்துக்களை அனைத்து உள்ளங்களுக்கும் தெருவித்து கொள்கிறேன்.இன்னுமொரு தீபாவளி இடுகையில் உங்களை சந்திக்கேறேன்.

ஆயுத பூஜை

  • 0

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவிகள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?


அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப்படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழிலாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?



இப்படி எல்லாம் இருக்க இந்த ஒன்பது நாளும் மதம் மதம் என்று இப்படி ஒரு கலகலப்பான காலத்தில் நாளையுடன் முடிவடைவதை இட்டு கவலை அடைகிறேன் காலத்தின் கோலம் என்ன செய்யும் பூயை புத்தியை கொடுக்காது தூக்க மாத்திரையாத்தான் கொடுக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம் அல்லவா?
எனது பூசை இந்த முறை சுட்டிக்குத்தான்


ஆசிரியர் தினம்+சிறப்பு நிகழ்ச்சி(cricket)

  • 0

இன்று 03 /10 /2011  எமது பாடசாலையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் எமது ஆசிரியர்கள் வெற்றி பெற்றார்கள் அத்துடன் அந்த போட்டி பற்றி சிறு அலசல் போடலாம் என நான் நினைக்கிறேன்.அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தியை முடித்துக்கொண்டு புதிய இடுகையில் உங்களை சந்திப்பதிலும் புதிய ஒரு மாதத்திலும் உங்களை சந்திக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


இன்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ஆசிரியர்களை எதிர்த்து எமது கல்லூரி மாணவர்கள் மோதினர் இதில் எமது ஆசிரியர்கள் வெற்றி பெற்று கொண்டனர் அந்த வகையில் எனது சார்பாக ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெருவித்துகொள்கிறேன் எமது ஆசிரியர்களில் சச்சின் னும் இல்லை முரளிதரனும் இல்லை அவ்வாறு இருந்த போதும் இளமை மிகு மாணவர்களை இலகுவில் வெற்றி கொண்டனர் இருந்த போதும் என்னால் இதனை முழுமையாக கண்டுகளிக்க முடிய வில்லை அந்தவகையில் மனம் வருந்துகிறேன்



முதலில் துடுப்பெடுத்தாடிய எமது கல்லூரி ஆசிரியர்கள் சிறப்பான துடுப்பாட்டத்தால் சுமார் பத்து பந்து பரிமாற்றத்தின் போது நூறு ஓட்டங்களை குவித்திருந்தனர் (இது சுமாரான ஓட்டம் ) எமது மாணவர்கள் பாவம் இல்லையா? என்ன ஒரு அடி அதிலும் ஒருவனின் பந்தில் மூன்று இமையமலை ஆறு ஓட்டங்கள் (6,6,6) அத்துடன் முடித்தார் அந்த மாணவன் பந்து வீசுவதை (வாழ்க்கையில் கூட நினைத்து பார்க்க மாட்டார்)

அத்துடன் ஒரு மாதிரியாக தப்பி பிழைத்தனர் எமது மாணவர்கள் (ஐயோ காணும் காணும்)

அதனைதொடர்ந்து துடுப்பெடுத்தாடிய எமது மாணவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் அனுப்பப்பட்டு கொண்டிருந்தனர் ஒருமாதிரியாக சூரிய கிரகணம் வருவது போல இடைக்கிடையில் ஒரு ஆறு ஓட்டங்கள் பெறப்பட்டது (சும்மா இப்படியாவது அடித்தால் தான் எங்களை நம்புவார்கள் என்ற நினைப்பு மாணவர்களுக்கு) சில வீரர்கள் ஓட்டம் எதையும் ப்ராத நிலையில் வெளியேற்றப்பட்டனர் (மட்டையை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் எமது வீரர்கள்)



ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது அந்த போட்டி அத்துடன் என்னும் ஒன்று என்னால் அங்கு நடைபெற்ற போட்டியின் பொது புகைப்படங்கள் பெற முடியாத காரணத்தால் (கருவிகள் ஒன்றும் யாவரிடமு  இல்லை பாடசாலையாகையால்)  நான் இங்கு தரவில்லை இங்கு தந்திருப்பையை எல்லாம் இணையத்தில் இருந்து பெறப்பட்டவையாகும் (படங்கள்)

இந்த முறையும் ஆசிரியர் தினம் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்களை தெருவித்துக்கொள்கிறேன்

தனியாள் செயற்திட்டம்

  • 0

          இப்படி இப்படி சொல்லியே மனிதர்களது உயிரை வாங்குகிறார்கள் நானும் அந்த வகையில் ஒருத்தன் எமது பாடசாலையின் தனியாள் செயற்த்திட்டம் மற்றும் குழு செயற்திட்டம் என்று எமக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது அந்தவகையில் அதற்க்கான நடவடிக்கையில் நான் இறங்கிஉள்ளேன் அத்துடன் என்னைபோன்ற மாணவர்களுக்காக இதன் விளைவுகளையும் இதனால் ஏற்ப்படும் நன்மைகளையும் கூற உள்ளேன்.

அத்துடன் எனது செயற்த்திட்ட தலைப்பு உலக உணவுத்திட்டத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்.அன்துடன் எனது செயற்த்திட்டத்தை நிறைவு செய்து உள்ளேன் அந்தவகையில் மானிடராக பிறந்த எல்லோருக்கும் நன்றி தெரிவிப்பது வழமை அதனால் எனது செயற்த்திட்டத்தை பூர்த்தி செய்ய உதவிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,நண்பர்கள்,சகோதரர்கள்,அத்துடன் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெருவித்துக்கொள்கிறேன்.இதனால் பயன் அடைவது இனிவருகின்ற சமுதாயமே இது எழுதுவது பற்றி ஒரு சிறு அலசல் 

செயற்த்திட்டம் எழுதும் ஒழுங்கு கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் அத்துடன் அதிகம் எழுதுவதை நிறுத்தி விடய உள்ளடக்கத்தை அதிகப்படுத்துதல் வேண்டும் இது எழுதும்போது இதனுடைய தலைப்பு முக்கியமாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் இது எழுதும் முறையாவது 

1.முன்பக்கம் 
2.பிரேரணை 
3.முகவுரை 
4.பொருளடக்கம் 
5.விடயம் (போதுமானளவு)
6.சார்பு நூல்கள் 
7.மாற்று பிரேரணை 
8.நன்றி நவினல்

என்ற ஒழுங்கில் அமைவது சிறப்பாக இருக்குமென நினைக்கேறேன் (நானும் அவாறே எழுதினேன்)
எதையாவது தவற விட்டிருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

அத்துடன் எனது இந்த நன்றி உரையில் யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னிக்கவும் இது ஒரு அறிமுகம் எனவே மாணவர்கள் இதை தவறாது செய்து வாழ்க்கையில் பல செயர்த்திட்டன்களை எழுதக்கூடிய ஒரு மாணவனாக மிளிர வேண்டும் என்பதே இதன் நோக்கம் 
  விளையும் பயிரை முளையில் தெரியும் 
எனவே தயவு செய்து இதனை செய்து பயன் பெறுங்கள் இனி அடுத்த இடுகையில் உங்களை சந்திக்கிறேன் 

எங்கிருந்து வருகிறார்கள்!................

  • 0

              சிலர் ஆக்குவதற்காக சிலர் அழிப்பதற்காக பிறக்கின்றார்கள் என்னும் சிலர் கூட இருந்து குழி பறிப்பதற்காக பிறக்கிறார்கள் ஒரு சிலர் உதவி செய்வதற்காக வந்து உபத்திரம் செய்கின்றார்கள் அந்தவகையில் இந்த பூமியில் எத்தனை வித மனிதர்கள் அவர்களின் எத்தனை வித சிந்தனைகள் என்றிருக்க கூடப்பிறந்த பழக்கவழக்கங்கள் கூட
    
         இன்றைக்கு எனது கணணியை சந்தோசத்துடன் open செய்து சில நிமிடம் முகப்புத்தகம் அத்துடன் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு மின்னஞ்சலை சரி பார்த்து பின்பு ஒரு சிறு தூக்கம் இன்றைக்கு வேற எமது கிராமத்தில் பெரு மழை அத்துடன் ஒரு வழியாக நண்பன் வீட்டை சென்று பின்பு எனது நண்பர்களுடன் மழை என்ற காரணத்தால் வெட்டி பேச்சு சில மணித்தியாலங்கள் இவ்வாறு இளமையை ஒரு அனுபவிப்பு (வாலிப வயது ; அனுபவி ராஜ அனுபவி).முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தனியார் வகுப்புக்கள் இல்லாத காரணத்தால் மீண்டும் எனது கணணியை open செய்தேன் (என்ன ஒரு அதிசயம்,இது தான் ஒவ்வொரு நாளும் நடை பெறுவது).


           
                           நான் இன்றும் வழமையாக செய்வது போல சென்று கணணி விளையாட்டுக்கள் அதை முடித்துவிட்டு எனது வன்தட்டில் உள்ள பாகம் (க,த,க,ப) open செய்தேன் திடீரென எனது கண்ணில் பட்டது ஒரு குறும் தகவல் அதை அரை குறை ஆங்கிலத்தில் வாசித்தேன் அப்பொழுது அதில் இருந்தது நான் கணனியில் நச்சுநிரல்களுக்காக இடப்பட்ட்ருந்த anti -வைரஸ் எனது கோப்புக்களை எல்லாம் அழித்து விட்டது 


திகைத்தேன் வெறுமையாக காணப்பட்டது எனது கணணி (பயிரை வேலி மேஞ்சது போல) என்னுடைய கோப்புக்களை தின்றுவிட்டது நான் எனது கணணியை shutdown செய்து விட்டு எனது நண்பன் வீட்டில் இருந்து இந்த இடுகையை எழுதி இருந்தேன் நான் முடிவாக என்ன கூற விரும்புகின்றேன் என்றால் இந்த anti -virus மாதிரியே எமது உலகத்தில் எத்தனை மனிதர்கள் தங்களை நம்பி வந்தவர்களை கழுத்தறுக்கிறார்கள் நான் முதல் கூறியது போல மனிதர்களது சிந்தனைகள் சில நன்மைக்கும் சில தீமைக்கும் பயன்படுகின்றன.

  
குறிப்பு; கணணியை நம்பியோர் கை விடபடுவார் இது எனது வாழ்க்கை தத்துவம் (அடியேன் pc antivirus காக்க)
                மேலும் ஒன்று எனது கணணியை திருத்திய பின்பு மீண்டும் ஒரு இடுகையில் சந்திக்கின்றேன் என்றும் ms

நண்பனுக்கு பிறந்தநாள்

  • 0

ஹலோ நண்பர்களே 
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு நபர் நானும் அந்த வகையில் இந்த வலைப்பூவில் சிறிய ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தியுளேன் முன்பு இருந்தவாறு எல்லாவற்றையும் வெறுக்கின்ற இந்த சமூகத்தில் பிறந்த படியாலும் அத்துடன் மாற்றத்தை விரும்புகின்ற இந்த உலகில் புதிய மாற்றத்துடன் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.
 எனது இந்த வலையுலகில் சிறிய சிறிய சேமித்த பதிவுகள் அத்துடன் மாறுகின்ற உலகின் நடத்தைகள் என்று சொல்லும் அளவுக்கு எனது பதிவுகள் இல்லாவிட்டாலும் என்னால் இயன்ற வரை இதனை இங்கு நான் தருகின்றேன். எனது இந்த குறிப்பினுடைய நோக்கம் இன்று எனது நண்பனின் பிறந்த நாள் அத்துடன் இந்த நாளை எனது வலையில் இட வேண்டும் என்ற அவா 
   அவனுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் அவ்வாறே எனது வாழ்விலும் எனது வலையிலும் என்றிருக்க எனது நண்பனுக்கு இந்த இடத்தில் எனது பிறந்த நாள் வாழ்த்தை கூறுகின்றேன் அவன் எதிலும் சிறப்புற்றிருக்க எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் (இவ்வாறு சொன்னால் தானே ஒரு கண்டோஸ் ஆவது கிடைக்கும்) 
                                                  அவனுக்காக சிறு கவிதை 
அரும்புதல் எப்போதும் அழகானதுபூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்…
மனிதனின் பிறப்பும்மலரின் அரும்புதல் போல்தான்…ஆனால்மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்மென்மையை இழக்கின்றோமா?!…மறக்கின்றோமா?!…எதுவோ ஒன்று…ஆனால்நாம் இறுகிப்போகின்றோம்..காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்…
காற்றின்வேகத்தில் சிக்கி தவிக்கும்இலைகளாக கிழிபடுகின்றோம்…சில வேளைகளில்திசைமாறும் சிறு இலையாய்
வாழ வழிதெரியாது தவிக்கின்றோம்…
கிழிந்துபோன, இறுகிப்போனஇதயங்களும்மீண்டும் புதுமலராய்பூரிக்கத்தான் செய்கின்றது…பூக்களின் இதழ்களின் மென்மையைஉணரத்தான் செய்கின்றது…நம்பிக்கையின் ஆணிவேர் கூடபுதிதாய் நெஞ்சில்
துளிர்க்கத்தான் செய்கின்றது…
வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாளில்!…
எனது நண்பனுடை பெயர் நான் குறிப்பிடவில்லை 
  என்று ஒரு கவிதை (நான் எழுதவில்லை) 
இன்று போல் என்றும், என்றென்றும்...பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

இது எல்லாம் இப்படியே இருக்க ஒரு முறை நண்பனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.குறிப்பு: எனது வலை முன்பு msdmosi.blogspot.com என்றிருந்தது அனால் இன்றுமுதல் மாற்றங்களை விரும்புவதால் mosikeeran-mosi.blogspot.com என்று மாற்றப்பட்டுள்ளது.

கந்தன் கருணை கணனியில்............

  • 0

                 இன்று நான் எனது முகப்புத்தகத்தை திறந்த போது அதிலே எனது நண்பர்கள் Group  ஒன்றில் என்னையும் ஒரு அங்கத்தவர்களாக இனைத்து இருந்தனர் அதிலே காணப்பட்ட இந்த பாடலை நீங்களும் கொஞ்சம் கேளுங்களேன் இதனை இங்கு இடுகையாக இட்டுள்ளேன் இதனை கேட்காமல் தான் காந்தியினுடைய குரங்குகள் காதுகளை பொத்திக்கொண்டுள்ளன போல எனக்கு தோன்றுகின்றன

துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
உன்னிப்புடன் நெஞ்சே குறி!

காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
அடியேன் சிஸ்டம் அழகுவேல் காக்க
வின்டோசைக் காக்க வேலன் வருக
கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
மவுசை மகேசன் மைந்தன் காக்க
எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
நில்லாதோட நீ எனக்கருள்வாய்
ஹாங் ப்ராப்ளமும்
ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
என் பெயர் சொல்லவும்
இடி விழுந்தோடிட
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
அலறவே வைத்திடும்
ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
மூவாகல் மூர்க்கம் செய்யும்
மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
நகர நீ எனக்கருள்வாய்
கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
கன்னா பின்னாவென்று வரும்
கமான்ட் இன்டட் ரெப்டுகளை
கந்தன் கைவேல் காக்க
அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
அனைத்து ஃபோர்டர்ஸீம்
ஆயுளோடு விளங்க
டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
சிறப்புடன் வாழ்க.
அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸர்
அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
ஷட்டௌன் தடங்கல்
சட்டென்று நீங்க
ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
கணினி சிஸ்டம் கவசம் இதனை
சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
    
    இந்தப்பாட்டு பிடித்திருந்தால் கட்டாயம் இந்தப்பாட்டை எழுதினவனை ஒரு முறையாவது நினைத்துப்பாருங்கள்.என்னை நினைக்க வேண்டாம் சத்தியமாக நான் இந்தப்பாட்டை எழுதவில்லை.

ஒரு நாள் நியத்தில் நடந்த உண்மை.............

  • 1

               
                                     சுமார் 08.௦௦30 மணியளவில் தனியே ஒரு பயணம் கந்தரோடையிலிருந்து வீடு நோக்கி கண்ட காட்சிகள் ஏராளம் கேட்ட வாக்கியங்களும் ஏராளம்
தனியே எனது வகுப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வரும் வழியில் ஒரு மது தவறணை அதையும் தாண்டி வந்தால் ஒரு சுடலை இவ்வாறு தனியே அச்சத்தின் மத்தியில் ஒரு பயணம் வீடு வந்து சேர்ந்திட வேண்டும் என்ற அவா பயணம் செல்கையில் மூவரை சந்திப்பு இருட்டிய நேரம் முனுமுனுகல் எனது காதில் கேட்டது,விரைவு எனது சைக்கிள் மீண்டும் கேட்பு ஓடியது எனது சைக்கிள்.கிரிஸ் மனிதன் என்ற அச்சம் 
    என்ன இதனை எல்லாம் வைத்துபார்க்கும் பொழுது என்ன ஒரு பேக்கதை சொல்ல போறேன் என்று எண்ணுகிறீர்களா இல்லை கிட்ட வந்து பார்த்தால் மூன்று வெறிகாரர்கள் நடு வீதியில் நல்லுறக்கம் அங்கே பத்து நபர்கள் வேடிக்கை இவ்வாறு ஒரு காட்சி அவர்களை சிலநபர்கள் எழுப்பி விட்டனர் அதில் மூவரினது வாயில் இருந்தும் மந்திரங்கள் பொழிந்தன (கேட்க என்ன ஒரு ஆனந்தம் ) அவர்கள் நான் வரும் பாதையில் தான் வந்தனர் முந்தவும் முடிய வில்லை முந்தினாலும் இன்பம் தரும் மந்திரங்கள் இவ்வாறு ஒரு பயணம் 
         அவர்களை தொடர்ந்து சில நபர்கள் வேடிக்கை பார்க்க நானும் அதில் ஒருவன் (வீட்டை நோக்கி) அதி ஒருவர் சிவாஜி பாட்டு வேற நடக்கவே முடியவில்லையாம் அதில் பாட்டுகள் (ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டி வைத்திருக்கவே வழியில்லையாம் அதில ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம் )என்ற நினைப்பு எனக்கு (அவர்களை பற்றி) 
அதிலே ஒரு சிந்தனை! யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் எங்கே போகுது?  அதிலும் ஒரு சந்தோசம் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் பனையில் அத்துடன் பனம்கோலாவிலும் என்று சிந்தனைகள் பலவிதம் அதிலே அது ஒருவிதம்.
வீதிகளின் இருபுறமும் சைக்கிள் ஓட்டம் நானும் அவ்வாறே இவ்வாறு ஒரு மாதிரியாக வீடு வந்து சேர்ந்தேன் அதனை ஒரு இடுகையாக இட வேண்டும் என்ற ஒரு ஆசையால் இதனை இங்கு தந்துள்ளேன் அத்துடன் அந்த நாளை நினைவு கூறுவதற்காகவும் இந்த இடுகையை தந்துள்ளேன் இவ்வாறு தந்தமை சிரிப்புக்காக இல்லை யாழ்ப்பாணத்தினுடைய கலாச்சாரத்தினுடைய போக்கை பற்றித்தான் இதனால் இரவு எட்டு மணிக்கு பிறகு குடிப்பதால் என்ன பயன் அதனால் அதற்க்கு முதல் குடியுங்கள் (அப்ப தானே இன்னும் நூறு பேர் பார்ப்பினம் நீங்கள் உலகம் முழுவதும் பிரபல்யம் ஆவீர்கள்) என்னும் நூறு பேர் உங்களை பார்த்து குடிப்பார்கள்